Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் ஓன்று கடந்த திங்கட்கிழமையன்று இரவு வேளையில் இனம்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பாடசாலைகளை அண்டியுள்ள வீதிகளில் பாதசாரிகள் கடவைகளை / மஞ்சள் கோட்டுக்கடவைகளை புதுப்பிக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வல்வை குழவிகள் கலா மன்றம் முப்பரிமாண கலைப்படைப்புக்களையும், வானில் பறக்கும் முப்பரிமாண உருவப்பட்டங்களையும் உருவாக்கி வருகின்றது. தமது ஆக்கங்களிற்கும் உழைப்பிற்கும் ஊக்கமும் உதவியும் அளித்த உறவுகளிற்கு வல்வை குழவிகள் கலா மன்றம் தமது நன்றியை தெரிவித்து உள்ளது. வல்வை குழவிகள் கலா மன்றம் பற்றிய விவரணம் ஏற்கனவே எமது இணையதளத்தில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் இன்று மதியம் நெடுயகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மிகச் சிறப்பாக பாடசாலை அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் இன்று மதியம் நெடுயகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மிகச் சிறப்பாக பாடசாலை அதிபர் திரு. பூ . சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக மனித வள முகாமைத்துவ பீட (Human Resource Management Faculty) 3ம் வருட மாணவர்கள் இன்று வல்வெட்டித்துறை பிரதேசத்திற்கு தமது குழுவினருடன் விஜயத்தை மேற்கொண்டு வல்வெட்டித்துறையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றனர்.
முன்னாள் வல்வை விளையாட்டுக் கழக(valvai Bulus ) வீரர்களினால் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு கடினபந்து உபரணங்கள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வானது வல்வை பொது விளையாட்டரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இன்று பி.ப 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு இரா ஸ்ரீ . நடராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் (VAISWA) 2013 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கமானது (VAISWA) தற்போது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் சனிக்கிழமை இன்று பி.ப 1.30 மணிக்கு சிதம்பரா கல்லூரி மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு ஆ.சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் வருட மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு பூமாலை அணிவித்து வாண்ட் வாத்தியத்துடன் அவர்களை வரவேற்றனர்.
தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் எதிர்வரும் 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு . இரா . ஸ்ரீ நடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
வல்வையர் பலர் கலைத்துறையில் சாதனைகளை படைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு வரும் ஞாயிற்றுக்கிழமை 17/02/2013 அன்று வேம்படி,உடையாமணல் வீதியில் அமைந்துள்ள, கலாநிதி திரு.சபா. ராஜேந்திரன் அவர்களது இலவச கல்விக்கூடத்தில் வல்வை கலை கலாச்சார இலக்கியமன்றத்தினரால் இந்த இசை மற்றும் ஓவிய பயிற்சி பயிற்சிப்பட்டறை நடாத்தப்படவுள்ளது.
நெடியகாடு வடக்கு ஞானவைரவர் கோவிலின் எண்ணெய்காப்பு சாத்தும் விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த எண்ணெய்காப்பு சாத்தும் விழாவில் பல பக்தர்கள் கலந்து கொண்டு ஞான வைரவருக்கு எண்ணெய் வைத்து வழிபட்டனர்.
2013 ஆம் ஆண்டிற்காக பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மார்ச் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேலதிக செயலாளர் பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 2011/2012 ஆம் கல்வியாண்டுக்கான Z வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாடத்திட்ட மாற்றத்திற்கு அமைவாக, Z வெட்டுப்புள்ளிகள் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கென தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையின் இல்லமெய்வன்மை போட்டிகள் யாவும் சிதம்பரா கல்லூரியின் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இல்லமெய்வன்மை போட்டிகளின் ஆரம்ப கட்ட போட்டிகள் தற்பொழுது கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA) ஒவ்வொரு மாத முடிவின் போதும் மாதாந்த செயற்பாட்டறிக்கை, கணக்கறிக்கை போன்றவற்றை வெளியிட்டுவருவது வழமை. இதன் அடிப்படையில் 2013 தை மாதத்திற்கான செயற்பாட்டறிக்கை நலன் விரும்பிகளினதும் பொதுமக்களினதும் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டுவரும் பெரு விழா தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று பெண்களுக்கான மென்பந்தாட்ட தொடர் கற்கோவளம் உதயதராகை விளையாட்டிக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2012ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்காக இரசாயனவியல் கல்லூரியினூடாக ( Institute of chemistry ) இரசாயனப் பட்டதாரியாக (Graduate Chemist of Chemistry ) வாய்ப்புண்டு.
வல்வை சிதம்பராக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் சனிக்கிழமை இன்று பி. ப 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு .கி. இராஜதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாகசபை உறுப்பினர் தெரிவும் இன்று காலை பத்து மணியளவில், வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் அமைந்துள்ள வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தில் நடைபெற்றது.
வல்வை மாணவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்வதனை நோக்கமாகக் கொண்டு VEDA நிறுவனமானது 2011.02.07அன்று தோற்றம் பெற்றது. இன்று தனது மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் VEDA நிறுவனத்தின் பாரிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த அனைத்து வல்வையின் நலன்விரும்பிகளுக்கும் VEDA தனது நன்றியினை இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றது.
வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் 2013 ம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்திய மீனவர்கள் இலங்கை வடகடலில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களின் பாதையாத்திரையானது மன்னார் மற்றும் யாழ் கரையோரமாக நகர்ந்து, இன்று காலை தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை சந்தியினூடாக பருத்தித்துறையை நோக்கிச் சென்றது.
வல்வை சிதம்பராக் கல்லூரி கடினப் பந்தாட்ட அணி உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் , கல்லூரி மாணவர்களின் திறன்களை வளப்படுத்தும் விதமாக கல்லூரிச் சமூகத்தால் மாணவர்களின் துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சு பயிற்சிக்கென வலைப்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களகத்தின் மூலம் நடத்தப்படும் நிறுவனம் சார் மற்றும் பாடசாலைப் பரீட்சைகளுக்கான இணைப்பு உத்தியோகத்தர் / பரீட்சை மேற்பார்வையாளர் பயிற்சிக் குழுமத்திற்கு உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்தல் தொடர்பான அறிவித்தல் ஒன்றை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.