Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நேற்று முன்தினம் காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள, பழைய ஊறணி ஊற்றினைப் புனரமைக்கும் பணியை தமது அடுத்த முயற்சியாக மேற்கொள்ளவுள்ளதாக "PM foundation" தெரிவித்துள்ளது.
நேற்று காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன,
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரை தேடும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நேற்றைய முன்தினம் முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் "மகாசென்" நிலைகொண்டிருந்த தாழமுக்கம் (Severe cyclonic storm), தற்போது மணித்தியாலத்திற்கு சுமார் 15 knots வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது பங்களாதேஷ் மற்றும் மியன்மாரை அண்டிய கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரை தேடும் பணி தொடர்கின்றது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக ((Severe Cropical cyclonic storm - Mahasen) வல்வெட்டித்துறையிலும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ தாழமுக்கம் (Severe cyclonic storm), தற்போது மணித்தியாலத்திற்கு 10-20 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இரவு அல்லது புதன்கிழமை காலை பங்களாதேஷையோ அல்லது மியன்மாரையோ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2013 ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் வல்வை நெட்கொலு கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்தார்.முன்னணி தமிழ் அறிஞராக ...
வல்வை நகரசபை தனது புதிய கட்டடத்தில், கடந்த பங்குனி மாதம் 18ஆம் திகதியிலிருந்து இயங்கத் தொடங்கியுள்ளது. 1990 இல் நிறைவேற்றப்பட்ட வல்வை நகர நிர்மாணத் திட்டத்தின் ஒரு பகுதியான இப்புதிய வல்வை நகரசபைக்கான அடிக்கல்லானது 1999 மே மாதம், வல்வை அம்மன் கோவில் குளித்தித் திருவிழா அன்று, அப்போதைய நகரசபைத் தலைவர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் நாட்டப்பட்டது.
இலங்கை -ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை (இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு) இல் தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழு நேரப் பயிற்சி நெறிக்கான அனுமதி -2013 ஆம் ஆண்டு அனுமதிக்கான ஆண்/ பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களினால் (ஐ.இ) ஆரம்பிக்கப்பட்ட சிதம்பராக்கல்லூரி வலை அமைப்பினரால் (CWN) நடத்தப்படும் கணிதப்போட்டிக்கு இதுவரை 700க்கும் அதிகமான மாணவரகள் விண்ணப்பித்து உள்ளார்கள்.
2014 ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பபத்திரங்களை 2013 ஆம் ஆண்டு மே 6 ஆம் திகதி தொடக்கம் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை அலுவலக வேலை நாட்களில் மு.ப 9.00 மணி தொடக்கம் ந.ப 12.00 மணி வரையும், பி.ப 1.30 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரையும் சட்டக்கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை சட்டக் கல்லூரி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காய்கறிச் சந்தை இதுவரை நடைபெற்று வந்த இடத்தில், புதிய சந்தைக்கான கட்டிட வேலைகள் ஆரம்பித்துள்ள காரணத்தால் சந்தையானது, தற்காலிகமாக காங்கேசன்துறை பருத்தித்துறை வீதியில் அம்பாள் வெதுப்பகத்திற்கு அருகாமையில் இயங்கி வருகின்றது.
காண்டவனம் வருடா வருடம் சித்திரை மாத வசந்த காலத்தையொட்டி வருவதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாக உள்ளதுமான அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்று 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவடைகின்றது.
இந்த வருடம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைத்திணைக்களம் அறிவித்துள்ளது.
VEDA கல்வி நிலையத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடலானது ஒவ்வொரு தவணையும் VEDA நிலைய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட கலந்துரையாடலானது 2013.04.27 அன்று நமது VEDA நிலையத்தின் முன்றலில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சென். செபஸ்தியர் தேவாலயத்தின் புனரமைப்பு வேலைகளை பகுதி பகுதியாகப் பிரித்து, ஒவ்வொரு வேலைகளுக்கும் தேவையான நிதி விபரங்களை தெரிவிக்கும் படி புலம் பெயர் நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச் சங்கத்தினர், மற்றும் வல்வை நலன் விரும்பிகள் கேட்டதிற்கு இணங்க,
ஆரம்பித்திருக்கும் கோடை காலத்தைத் தொடர்ந்து, வல்லை சம வெளிப் பகுதியில் ஆயிரக்காணக்கான வெளிநாட்டுப் பறவைகள் ஒன்று கூடுகின்றன. இக் கண்கொள்ளாக் காட்சியை யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியூடாக, வல்லை வெளியால் செல்லும் பயணிகள் பார்வையிட்டுச் செல்லுகின்றனர்.
இயக்குனர் பாலா தனது பிதாமகன் திரைப்படத்தில், படத்தின் முதல் காட்சியையே மயானத்தில் (சுடுகாட்டில்) காட்டியிருந்தார். இப்படம் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது. இக்காட்சி மூட நம்பிக்கைக்கு எதிராகக் காட்டப்பட்டிருந்தது. அத்துடன் ஒருவரின் வித்தியாசமான துணிச்சலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
கனடா (Toronto) வில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக பொங்கல் விழா எதிர்வரும் 24.05.2013 (வெள்ளிக்கிழமை)அன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு - விலை மதிப்பு திணைக்களத்தின் சட்ட அலுவலர் பதவிகள் இரண்டிற்கு தகமையுடைய இலங்கைப் பிரஜைகளிடம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Canada Toronto Blues கழகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த கூட்டம் எதிர்வரும் மே 12ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கனடா முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நில அளவித் திணைக்களத்தினால் நில அளவையாளர் நாயகத்தின் உத்தரவு பெற்ற பட வரைஞர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்காக நடத்தப்படும் பரீட்சை (2013) கொழும்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறவுள்ளது.
நடைபெற்று முடிந்த வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வாக குளித்தித் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. குளித்தி அபிசேஷகத்தை முன்னிட்டு நடைபெறும் இரவுத்திருவிழா கற்பூரத்திருவிழா (கற்பூரச்சட்டி) ஆகும்.
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் 'PM Foundation' எனும் அமைப்பினால் சில நாட்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த வல்வெட்டித்துறை சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைகளின் ஒரு பகுதி தற்பொழுது பூர்த்தியடைந்துள்ளது.
நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களுக்காகஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்புக்கு இணங்க இலங்கை ஆசிரியர் சேவையில் 3 - 1 தரத்திற்கு ( தமிழ், ஆங்கிலம், சிங்களம் ) பட்டதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.