Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
உணவு ஆணையாளர் திணைக்களத்தில் வெற்றிடமாக இருக்கும் மேற்பார்வை முகாமைத்துவ உதவி தொழில் நுட்ப உத்தியோகத்தர் (தானிய ஆய்வாளர் - தரம் 111) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு தகுதியடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1929 இல் செய்யப்படிருந்த அன்னபூரணியின் நீளம் 90 அடி (133 அடி நீளம்). அனால் இப்போதைய பிந்தைய கப்பல்களின் நீளம் 1310 அடி. ஆகாய விமானகளும் இரு தட்டுக்களுடன் வரத் தொடங்குகின்றன. சீனாவில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட புகையிரதத்தின் வேகம் ஆகாய விமானகளைக் கலைக்கும் அளவிற்குள்ளது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் கலந்துரையாடலும் ஒன்றுகூடலும் கடந்த 27.05.2013 அன்று நடைபெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில் விபரங்கள், மற்றும் 28.04.2013 நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரங்களின் நகல்கள் என்பவற்றை வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் மிகச் சிறப்பாக வைகாசி விசாகப் பொங்கல் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தான் நடைபெறுவது வழமை. இதற்கமைய இம்முறையும் இவ் மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றதனை கீழுள்ள படங்களில் காணலாம்.
கணபதி பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் ( தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
நேற்றைய தினம் அம்மன் ஆலயங்களில் வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இவ் மகோற்சவம் பொதுவாக வருடத்தின் வைகாசி மாதத்தில் வரும் விசாக தினத்தில், அதாவது வைகாசிப் பூரணை தினத்திற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை அன்று மாலை வேளைகளை நடைபெறுவது வழக்கம்.
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 27.05.201 இன்று மாலை பூங்காவனத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரபல பின்னணி பாடகர் T.M.சௌந்தரராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் டி.எம் சௌந்தரராஜன் டி.எம்.எஸ் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர், 1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்.
சில தினங்களுக்கு முன்னர் நாம் 'இம்முறையும் வல்வையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் பயிலும் மணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, ஒரு சிலரே க.பொ .த (சா/த) பரீட்சையில் சித்தியடையாதவர்களின் எண்ணிக்கை கவலைக்குரிய தொன்றாகவுள்ளதும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். இதற்கு அதிருப்தி தெரிவித்து வாசகர் ஒருவர் விபரம் தெரிவித்துள்ளர்.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தில் (Images of Valvai), கடந்த மாதம் அன்னபூரணியின் அமெரிக்கா பயணத்தின் வைர விழாவின் ஆரம்ப நிகழ்வும், வல்வை வரலாற்று ஆவண காப்பகத்தின் முதலாவது நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நடைபெற்றிருந்த நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு, (பகுதி 2 நாளை பிரசுரமாகும்)
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 11.05.2013ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 15ஆம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 10ஆம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை 0830 மணியளவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 11.05.2013ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 14ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 9ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
க.பொ.த (சா/த) பரீடசையின் பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து, புதிய க.பொ.த (உ /த) வகுப்புக்கள் அண்மையில் ஆரம்பித்திருந்தமை அனைவரும் அறிந்ததே. இம்முறையும் வல்வெட்டித்துறையிலிருந்து க.பொ.த (உ /த) கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவேயுள்ளது.
Florence C Robinson, Ex அன்னபூரணியம்மாள் எனும் கப்பலானது 1936 ஆம் வருடம் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு, பின்னர் கொழும்பு துறைமுகத்திலிருந்து அமெரிக் காவின் Gloucester துறைமுகத்தை சென்றடைந்த 75 ஆவது வருடத்தைச் (1st August 1938) சிறப்பிக்கும் முகமாக, எம்மால், அ. சி. விஷ்ணுசுந்தரம் நினைவு மையத்தினால் (Canada) அனுசரணையுடன் ஓவியப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாட்டில் இயங்கி வரும் கணபதி பாலர் பாடசாலைக்கு, புதிய மாடிக்கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சியினை கணபதி பாடசாலை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
CWN இனால் நடத்தப்படும் கணிதப்போட்டிக்கு பிரித்தானியா முழுவதும் இருந்து 1467 மாணவர்கள் பங்குபற்ற உள்ளார்கள். இக்கணிதப்போட்டியால் எமது கல்லூரிக்கும், எமது ஊருக்கும், இங்கிலாந்தில் வாழும் எம் ஊர் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு ஆகியவற்றின் ஒரு திட்டத்திற்கமைய, முன்னெட்டுக்கப்பட்டுவரும் வல்வெட்டித்துறை நீர் வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியான தொண்டைமானாற்றில் அமைந்துள்ள பாரிய நீர்த் தாங்கியின் வேலைகள் பூர்த்தியாகின்றது.
படங்களில் காணப்படுபவை புதிதாக கட்டப்பட்டு முடியும் தருவாயிலுள்ள தொண்டைமனாற்றுப் பாலம். இப்பாலம் யாழ்பாணத்தின் B 75 பாதையான யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கின்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 5ஆம் திருவிழா இன்று காலை 10 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த சுவாரசியமானதும் ஏற்கக்கூடியதுமான விடயம் எனது பேனையிலிருந்து எழுதப்படவில்லை. அத்துடன் இக்கட்டுரையில் உள்ள விடையங்களிற்கும் நான் உரிமை கூறவுமில்லை .
வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் அமைந்துள்ள ஊரணி தீர்த்த மண்டபத்தின் சில உடையும் நிலையிலிலுள்ள பகுதிகளைப் பிரஸ்தாபித்து வாசகர் ஒருவர் சில புகைப் படங்களை அனுப்பியுள்ளார்.
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 10 over கொண்ட மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரை இறுதியாட்டம் , மாலிசந்தி மைக்கல்விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.
நம்புவதற்குக் கடினம் தான். சுமார் 1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டுள்ள இக்கப்பல், Willaim Albert Robinson எனும் அமெரிக்காவைச் சார்ந்த தனவந்தரால் வாங்கப்பட்டு, வல்வெட்டித்துறை சிப்பந்திகளால் (தண்டையல்களால்) அமெரிக்காவின் Gloucester துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ‘மகாசென்’ (Tropical Cyclone), வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நேற்று அதிகாலையில் வங்கதேசத்தை கடந்தது, அதன் பின்னர் படிப்படியாகப் பலமிழந்து தொடர்ந்து வடகிழக்குத் திசையில் சுமார் 25 கடல் மைல்கள் வேகத்தில் வேகத்தில் நகர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராப் பகுதியைக் கடந்து சென்றுள்ளது.
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 11.05.2013 சனிக்கிழமை அன்று ஆரம்பமானது. இவ் வருடாந்த மகோற்சவத்தின் 6ம் நாள் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு வங்காள விரிகுடாவிலிருந்து, தற்போது மணித்தியாலத்திற்கு சுமார் 15 knots வேகத்தில் வடகிழக்காக நகர்ந்து கொண்டிருக்கும் தாழமுக்கம் ‘மகாசென்’ ( Tropical Cyclone) இன்னும் சில மணித்தியாலங்களில் பங்களாதேஷின் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.