Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறை உள்பட பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தொடர்ந்தும் வடக்கு மாகாணத்திலும், வடகிழக்கு, வடமேற்கு கரையோர பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடையே பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையை அடுத்து வடக்கில் தண்ணீர் மூலமாகப் பரவும் நோய்களின் தொற்று தீவிரமடையலாம் என்பதால் உணவு, குடிதண்ணீர் என்பவற்றின் சுகாதாரத்தைப் பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
பருத்துத்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிமுதல் நடைபெற்றது. சம்பிரதாயபூர்வ மௌன அஞ்சலி, மங்கள விளக்கு ஏற்றுதல் மற்றும் கல்லூரிகீதம் ஆகியவற்றுடன் ஆரம்பித்த இந்நிகழ்வு, கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. S. திருவாகரன் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால் வான் கதவுகள் நேற்றைய முன்தினம் சில மணி நேரத்திற்கு திறக்கப்பட்டிருந்தது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையிலுள்ள பிரார்த்தனை மண்டபத்தில் இன்று காலை பூப்பந்தாட்டஅறிவுரை, ஆலோசனை, பயிற்சிவகுப்பு என்பன பேராசிரியர் திரு. சபா. இராஜேந்திரன் அவர்களால் நடாத்தப்பட்டன.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நத்தார் மரம் ஒன்று 82 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் இலங்கையில் இம்முறை அமைக்கப்பட்ட மிக உயரமான நத்தார் மரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை தேவாலாயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு பங்குதந்தை அவர்களால் திருப்பலி நடாத்தப்பட்டு, இயேசு பாலன் பிறப்பு சிறப்பாக நடைபெற்றது. இயேசு பாலன் பிறப்பை தொடர்ந்து தேவாலாயத்தின் மணி ஒலிக்கப்பட்டு வெடி கொழுத்தப்பட்டது.
வல்வெட்டித்துறை சேர்ந்த உலகுடைய பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் வசிக்கும் (வல்வெட்டித்துறை தேவாலாயத்திற்கு அருகில்) இளைஞர் ஒருவரினால் இந்த பட்டம் ஏற்றப்பட்டது.
க.பொ.த. சாதாரண தர விஞ்ஞானப் பாட வினாத்தாள், பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியாகியது உண்மை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் 19 வினாக்களுக்கும், பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வல்வை இந்து ஆலயங்களிலும், மார்கழி மாதத்தில் நடைபெற்றுவரும் திருவெம்பாவையும், அதிகாலையில் 02.00 மணிக்கு சங்கு ஊதி நிகழ்வும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நாட்டில் பல பிரதேசங்களில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2013 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்று நாயகன், சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், ஒரு நாள் கிரிக்கெட் டிலுருந்து (ODI - One Day International) இன்றிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டதட்ட 74 -84 க்கிடையில் வல்வெட்டிதுறையிலிருந்து ' CROSS WORLD NAVIGATION' என்ற சிங்கப்பூர் கம்பெனி கப்பல்களுக்கு Cadet ஆக போனவர்கள் பலர். இப்படி போவதற்கு முக்கிய காரணமாக அப்போது அந்த கம்பெனியின் முக்கிய நிர்வாகியாக இருந்த எமது ஊரைச் சேர்ந்த மணிவாசகம் அவர்களாக்கும்.
யாழ். குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த வருடத்தில் கடந்த 12 மாதங்களில் கடந்த 20 ஆம் திகதி வரையில் 725.7 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்டு வரும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டம் இன்று கொற்றாவத்தை றேன்சஷ் வி . கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) வல்வை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு தமது பங்களிப்பினை வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்களுடன், தைத்திருநாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் வரும் 30.12.2012 அன்று கல்லூரி மண்டபத்தில் காலை 0900 மணிக்கு நடைபெறவுள்ளது. விபரங்கள் கீழே இணக்கப்பட்டுள்ளன.
வல்வையில் சுமார் 72 ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கபட்ட வானொலிப் பெட்டியைப் படங்களில் பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்ட வானொலிப் பெட்டி பற்றிய விபரங்கள், வல்வெட்டித்துறை.org இற்காக, இவ்வானொலிப் பெட்டியின் உரிமையாளரின் உறவினரால் தரப்பட்டுள்ளது.
புற்றளை வினஷ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்திவரும் 10 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் கால்இறுதியாட்டம் நேற்று (புதன்கிழமை) உபயகதிர்காமம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
உலகெங்கினும் வாழும் நல்லோர் உதவியுடன் வல்வையர் பெருமைப்படும் விதத்தில் ஒரு சிறப்பான விஞ்ஞான ஆய்வுகூடத்தினை எம் தமிழ் சிறார்களுக்காக அமைத்துக் கொடுத்துள்ளது - Chithambara College Well-wishers Network (CWN) அறிக்கை
2012 G.C.E (O/L) இல் தோற்றிய மாணவர்களுக்கான (2015 G.C.E (A/L) கணித, விஞ்ஞான பிரிவுகளில் தோற்றும் மாணவர்களுக்கு) திசைமுகப்படுத்தலும், நவீன ஆய்வு கூட ஆய்வுகூட செய்முறை வெளிப்படுத்தலும், யாழ் வல்வை சிதம்பராக்கல்லூரியில் வரும் 21/12/2012 அன்று நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஊறணி நீரூற்று மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக, மதிய சுற்றாடல் அதிகாரசபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பெயரிடும் இந்நிகழ்வு நேற்று (18.09.2012) நண்பகல் நடைபெற்றிருந்தது.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் வருபவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவர் என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.