Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பதவிகள் வெற்றிடத்திற்கான இலங்கை அரசின் வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு, 14 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பல தரப்பட்ட வெற்றிடத்திற்கான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வல்வை அம்மன் கோவிலடியில் புதிதாகக் கட்டி, முடிவுக்கு வரும் நிலையில் உள்ள, புதிய நகர சபைக் கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக வல்வை நகர சபை வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நேதாஜி A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இப் போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.
VEDA கல்வி நிலையமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக வல்வையின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. இத்தகைய வளர்ச்சிக்கு வல்வையின் நலன் விரும்பிகள் உறுதுணையாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் VEDA நிர்வாகத்தினர் தமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
வல்வை சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர்களால் சர்ச்சைகுரியது என அவர்கள் கருதும் 'வேட்புமனுத்தாக்கல்' தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது, அதன் விபரம் பின்வருமாறு .
சென்னையில் வருடாவருடம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் BAPASI (Booksellers and Publishers Association of South India)யினால் நடாத்தப்படும் 36 வது புத்தகக் கண்காட்சி இம்முறை சென்னை நந்தனம் YMCA உடற்பயிற்சிக் கல்லூரியில் 11/01/13 தொடக்கம் 23/01/13 வரை நடைபெற்றுவருகின்றது.
தைப்பொங்கல் தினத்தன்று இரவு மக்கள் பட்டாசு மற்றும் வாணம் கொளுத்தி கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், வல்வெட்டித்துறை வேம்படி சில்லாலை பகுதியில் விடப்பட்ட குருவி வானம் ஓன்று தென்னை ஒன்றின் வட்டில் அகப்பட்டதால் தென்னை எரிய ஆரம்பித்தது.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த பெரியவர்களாலும் , இளைஞர்களாலும் வீடுகளில் வைக்கப் பட்டிருந்த விநாயக முகூர்த்தங்கள் எடுக்கும் வைபவம் தைப்பொங்கல் தினத்தில் மாலை பொழுதில் சிறப்பாக நடைபெற்றிருந்தது
விரைவில் வெளிவரவுள்ள பனி விழும் மலர்வனம் எனும் தமிழ் திரைப்படத்தின் எமக்குக் கிடைத்த பிரத்தியேக புகைப் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. படம் பற்றிய விரைவான செய்திகள் நேற்றைய எமது செய்தியில் பிரசுரித்திருந்தோம். படத்தின் நல்ல கதையம்சத்தைக் கருத்திற் கொண்டு இத்தகவல்களை பிரசுரிக்கின்றோம்.
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் 10.01.2013 அன்று கோலாகலமாக ஆரம்பித்த பெருவிழா, இன்று செபஸ்தியார் பெருநாள் சிறப்புற மழையின் மத்தியில் முடிவடைந்தது.
'பனி விழும் மலர்வனம்'. தலைப்பைப் போலவே காட்சிகளும் கவித்துவமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம். மனதுக்கும் உடலுக்கும் இதமான தேனி மாவட்டத்தை அண்டிய தேக்கடி, குமுளி ஆகிய மலைப்பகுதிகளில் படமாகிறது. விரைவில் வெளிவரவுள்ள இப்படம் பற்றிய கீழ் உள்ள விபரங்கள் எமது இணைய தளத்துக்கென அனுப்பப்பட்டவையாகும்............ பிரத்தியேக புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்படும்.
இப்பட்டங்களை உருவாக்குவதில் முதன்மையான இரு சகோதரர்கள் - எமது 'வாரம் ஒரு படம்' பகுதியில் பதிவாகியிருந்த பல விதப் புறாக்களுக்கு சொந்தக்காரர்களாவர். பல்வேறு விளையாட்டுகளிலும் சிறந்த இவர்கள், பல்வேறு தொழில் தெரிந்த கடின உழைப்பாளிகள்.
இந்த வ ருடம் தரம் 1 இல் புதிதாக சேர்த்துகொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்றது. வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் கால்கோள் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
Valvettithurai.org ஆல் வெளியிடப்பட்டிருந்த வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் கலை விழா நிகழ்வுகள் மற்றும், குழவிகள் கலா மன்றத்தினரின் பல்வேறு பங்களிப்புகள், ஆகியவை தொடர்பான விரிவான செய்திகளை அடுத்து, வாசகர் ஒருவர் இவர்களின் மேலதிக வளர்ச்சிகளுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.
வாசகர்களின் கருத்துக்களை எமது இணையதளத்தில் நிரந்தரமாகப் பதிவாக்குவதற்கு நாம் முடிவெடுத்துளோம். இதற்கமைய இன்றிலிருந்து இப்பகுதியை ஆரம்பித்துள்ளோம்.
இதில் வாசகர்களின் கருத்துக்களுடன், அவர்களின் பெயர், ஈமெயில் id, வாழும் இடம் மற்றும் கருத்துக்கள் கிடைக்கப்பெற்ற திகதி ஆகியவை இடம்பெறும்.
தைப்பொங்கல் தினத்தன்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பட்டப்போட்டியில், வல்வை குழவிகள் கலா மன்றத்தால் உருவாக்கப்பட்டிருந்த பிரமிட், தும்பி, ஸ்பைடர்மேன், பறக்கும் தட்டு, சனிக்கிரகம், ரைட் சகோதாரர்களின் விமானம், சூரியன் ஆகிய ஏழு விநோதமான பட்டங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Australiya இன் Sydney நகரில் வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள கண்காட்சி ஒன்றில், வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று நடைபெற்ற பட்டப் போட்டியின் பட்டங்களின் படங்கள் வைக்கப்படவுள்ளன. இக் கண்காட்சியினை யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு.ரவி அவர்கள் யாழ்மாவட்டத்தின் 2012 ம் ஆண்டுக்கான சிறந்த கால்நடை வளர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வல்வையில் அவரது வீட்டில் நடைபெற்றது, இந் நிகழ்வில் யாழ் மாவட்ட கால்நடை தலைமை வைத்திய அதிகாரி கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இன்று மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாப்பட்டது. இங்கு வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு.ரவி அவர்களின் மாட்டுத்தொழுவத்தில் மாட்டுப்பொங்கல் நிகழ்வு கொண்டாடப்படுவதனை படங்களில் காணலாம் .
நேற்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற பட்டப் போட்டி நிகழ்வுகள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பலரைச் சென்றடைந்துள்ளது. பட்டப் போட்டி பற்றிய அறவிப்பு www.wonderlanka.com இலும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது
நடைபெற்ற நத்தார் பண்டிகை நிகழ்வுகளை, எமது இணையதளத்தில் வெளியிட்டமை பல வாசகர்களைச் சென்றடைந்துள்ளது. இந்த நிகழ்வு இதுவரை காட்சிப் படுத்தப் பட்டிருக்கவில்லை. இதன் விளைவாக வல்வை கிறிஸ்தவ தேவாலயம் பற்றி வாசகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதனை கீழே இணைத்துள்ளோம். Thank you for the publishing our Valvettithurai church christmas celebration photos, but
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில், வல்வை விக்னேஸ்வரா சனசமூகத்தினரினால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று மாபெரும் பட்டப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது. வல்வை உதயசூரியன் கடற்கரையில் சுமார் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பித்த இப் போட்டி 6.30 மணிவரை நீடித்தது.
தைப்பொங்கல் தினமான இன்று கனடா ஒன்டாரியோவில் கந்தசுவாமி ஆலயத்தில் அறிவகம் மற்றும் கனடா தமிழ்க் கல்லூரி ஆகியவை நடத்திய பொங்கல்விழாவில், கனடா வாழ் வல்வை மக்களும் பங்கு பற்றியிருந்தனர். இதில் சிறார்களால் தமிழர்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் கலை நிகழ்வுகள் மிகச் சிறப்பாகக் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வல்வை வேவில் இளைஞர்களினால், இன்று 35 அடி மற்றும் 25 அடி உயரமான பட்டங்கள், வேவில் பிள்ளையார் மற்றும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஏற்றப்பட்டது. இலங்கையில் இதுவரை ஏற்றப்பட்ட பட்டங்களில் இதுவே அதிக உயரமானது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
தைத்திருநாளான இன்று வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் பானை வைத்து பொங்கல் கொண்டாடப்பட்டது. இவ்வாறு வல்வைச் சந்தியில் தமிழர்களின் தைத் திருநாள் தமிழர் பண்பாட்டு முறைப் படி கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பொங்கல் வந்தது... பொங்கல் வந்தது... பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடப் பொங்கல் வந்தது, தை ஒன்றிலே மலர்ந்திடும் தைப்பொங்கல். தைத்திருநாள்... தரைமொழுகிக் கோலமிட்டு,
மாவிலை தோரணம் ஆங்கசைய கலம் தாங்கிட அடுப்பமைத்துப் புதுக்கலம் அதிலேற்றி
பகலவன் முகம் நோக்கிக் கலம் அமைய பகலவனும் கலம் நோக்க........கவிதை - திரு.வ.ஆ.அதிரூபசிங்கம்.
வதிரி பொம்மெஷ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை B விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மானிப்பாய் ரெட்றேன்சஷ் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டம் வதிரி பொம்மெஷ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தடகளம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்தாட்டம், எல்லே ஆகியவற்றிற்கான போட்டிகளில் சாதனைகள் படைத்ததுள்ளன. 2012ம் ஆண்டிற்கான சாதனைகளாக இவை பதியப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் (Bay of Bengal) உருவான குறைந்த காற்றழுத்த (Low pressure) தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ம் தேதி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று நேற்று வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் பாம்பன் ரயில் பாலத்தை கடப்பதற்காக காத்திருந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் தரைதட்டின.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.