யாழ்ப்பாணத்தின் கலையான செப்புத் தகட்டு புடைப்புச் சித்திரக் கலையை அழிய விடாது பேணும் நோக்குடன் யாழ். மாவட்ட தேசிய அருங்கலைகள் பேரவையால் அதற்கென ஒரு கழகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடிப் போட்டிகள் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றன.
வல்வை வாலாம்பிகை வைத்தீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 12.03.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்த மகோற்சவத்தை அடியார்களுக்கு தெரிவிக்கும் முகமாக மாணிக்கவாசகர் பல்லக்கில் ஏறி வீதிகள் வழியாக ஊரிலுள்ள ஏனைய ஆலயங்களுக்கு சென்று வந்தார்.
சிவராத்திரி விழாவை முன்னிட்டு வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தால்அணிக்கு இருவர் கொண்ட கடற்கரை கரப்பந்தாட்ட (Beach Volleyball) சுற்றுப் போட்டி நேற்று இரவு வல்வை காட்டுவளவு நேதாஜி கடற்கரையில் மின்னொளியில் நடாத்தப்பட்டது.
வர்த்தமானி அறிவித்தலின் படி வணிகக் கப்பத்துறைப் பணிப்பாளர் நாயக அலுவலக பதவி வெற்றிடங்களான பணிப்பாளர் (தரம் 1 பொறியியல் ), பணிப்பாளர் (தரம் 1 கப்பல் ) ஆகிய துறைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினரின், இசை மற்றும் ஓவிய பயிற்சி வகுப்புக்கள் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற்று வருகின்றது. இப் பயிற்சியினை மேற்கொள்வதற்காக குறிப்பிடக்கூடிய வல்வை மாணவர்கள் பயிற்சி வகுப்புக்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் உற்சவமானது முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவருகிறது. இது வல்வெட்டித்துறை சிவன் கோவில் வருடாந்த திருவிழாவின் ஒரு தொடக்கமாக நடைபெற்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடர் இன்று திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இதில் ஆண்கள் மற்றும் பெண்களுகான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது.
இலங்கை மத்திய வங்கியின் அச்சகத்தில் வங்கியின் நிரந்தரப் பதவியில் தாள் வெட்டுபவர், புத்தகம் கட்டுபவராக நியமிக்கப்படுவதற்கு தகைமையும் அனுபவமும் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியின் இணையதளமான http://www.cbsl.gov.lk இலிருந்தும் விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து பொற்றுக்கொள்ளலாம்.
வல்வை சென்.செபஸ்தியர் தேவாலயத் திருப்பணி வேலைகள் முன்னெடுப்பதற்கு வாசகர் ஒருவரின்உதவியினால், புலம் பெயர் நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச் சங்கத்தினர், மற்றும் வல்வை நலன் விரும்பிகள் உதவ முன் வந்துள்ளனர்.
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சென்.செபஸ்தியர் தேவாலயத்தின் புனரமைப்பு வேலைகளை பகுதி பகுதியாகப் பிரித்து, ஒவ்வொரு வேலைகளுக்கும் தேவையான நிதிவிபரங்களை தெரிவிக்கும்படிபுலம் பெயர் நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச் சங்கத்தினர், மற்றும் வல்வை நலன் விரும்பிகள் கேட்டதிற்கு இணங்க, தேவாலய நிர்வாகம் முதற்கட்ட வேலைகளுக்கான விபரங்களை அறிவித்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழகத்தின் 2012 ம் ஆண்டுக்கான முகாமைத்துவ (Management ) கற்கைநெறியின் புதிய மாணவர்கள் தமது பதிவுகளை நாளை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களுக்கான பாடநெறியானது, இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் 2013ம் ஆண்டிற்கான கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் முதலிடம் பெற்றது. இந்த வெற்றிச் செய்தியை உதயன் பத்திரிகையில் புகைப்படத்துடன் 03.03.2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கோட்டப் பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த போட்டிகளில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களும் பங்குபற்றி வருகின்றனர்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட ஜந்து Over களை கொண்ட மென்பந்தாட்ட தொடர் இன்று காலை வல்வை நெற்கொழு மைதானத்தில் நடைபெற்றது . இந்த சுற்றுப் போட்டியில் பதினான்கு கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் இரத்ததான முகாம் மாவட்ட (ஊரணி) வைத்தியசாலையில் இன்று காலை 9 மணியிலிருந்து 12.30 மணிவரை இரத்ததான முகாம் நடைபெற்றது.
உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட Setup முறையிலான கரப்பந்தாட்ட போட்டியின் முதலாவது சுற்றுத் தொடர் நேற்று மின்னொளியில் சிவகுமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிடத் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை பி.ப 12.31-13.10 மணியளவில் நகராட்சி மன்றத் தலைவர் திரு நடராஜா அனந்தராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஊறணி வைத்தியசாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை 9 மணியளவில் இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. இவ் இரத்ததான முகாமிற்கான பிரதான அனுசரணையைவல்வெட்டி ஒற்றுமை விளையாட்டு கழகத்தினர் வழங்குகின்றனர்.
வல்வை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிடத் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பி.ப 12.31-13.10 மணியளவில் நகராட்சி மன்றத் தலைவர் திரு நடராஜா அனந்தராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றமானது ஒவ்வொரு ஆண்டும் கலைவிழா , இலக்கிய போட்டிகள் சஞ்சிகை வெளியிடுதல் மற்றும் குறும் படம் தயாரித்தல் போன்றவற்றை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள் . அத்துடன் மாணவர்களின் பல்வேறு திறன்களை அதிகரிப்பதற்காக 17.02.2013 அன்று இலவச சங்கீதம் மற்றும் சித்திரம் போன்ற வகுப்புக்களை யும் ஆரம்பித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா 28ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் திரு மயில்வாகனம் சிவசூரிய அவர்கள் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் 6 அமர்வுகளைக் கொண்டதாக நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட எல்லே போட்டியானது , இன்று அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்டது.
சிதம்பரா கல்லூரியில் காற்றோட்டமான, சுகாதாரமான கழிப்பறைகளின் தேவையை பூர்த்தி செய்யுமுகமாக கடந்த நாற்பது நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட காற்றோட்டமுள்ள இலகுவாக பராமரிக்ககூடிய பெண்கள் கழிப்பறை அமைக்கும் வேலைகள் பூர்த்தியடைந்துள்ளது.
பல்துறைசார் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கும் இலங்கை ஊடகவியல் கல்லூரி ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
க.பொ.த. உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்கள் இவ் டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
சிதம்பராக் கல்லூரி நலன் விரும்புவோர் வலையமைப்பு (Chithambara College Well-wishers Network) - CWN மாணவ, ஆசிரிய, பெற்றோர்களுக்கு உதவும் முகமாக தமது புதிய இணைய தளத்தினை உருவாக்கியுள்ளது.
கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று மதியம் பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு க .உதயரூபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.