Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று காலை 09.30 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை ஊறணியைச் சேர்ந்த திரு ராமதாஸ் ரமேஷ் அவர்கள் SLAS (Sri lanka Administrative Service Exam) பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார். இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள பரீட்சைகளில், SLAS பரிட்சையானது மிகவும் முதன்மையானதாகவுள்ளது.
எதிர்வரும் 06.04 2013 அன்று நடை பெறவுள்ள தங்கள் நலன்புரிச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். தங்கள் நிகழ்ச்சி நிரலில், தங்களின் வசதிக்கேற்ப, வல்வையின் பின்வரும் விடயங்களையும், கனடா வாழ் வல்வை மக்களுக்குத் தெரியப்படுத்துவீர்களானால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாம் பெரிதும் நம்புகின்றோம்.
குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர் இலட்சியவாதியாக இருந்து, தம்மைப் பார்த்து குழந்தைகள் பழக வேண்டும் என்று எண்ண முடியாது. பெற்றோர்களிடம் நல்ல பழக்கங்கள் இருத்தல் அவசியமாகும்.
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் தாய் சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டம், கல்லூரிமண்டபத்தில் 24-03-2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை ரேவடி ஞான வைரவர் கோவிலில் மணிக்கோபுர கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட ரேவடி ஞான வைரவர் கோவிலின் மணிக்கோபுரமானது திரு. பூ . தேவராசா அவர்களின் குடும்பத்தினரினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
நடைபெற்றுக்கொண்டிருந்த வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று, தீர்த்தத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் புனித வாரத்தை முன்னிட்டு யாழ் மறை மாவட்டத்தின் சக்கோட்டை பங்கின் ஆலயங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிலுவைப்பாதை நேற்று வல்வெட்டித்துறை சென்.செபஸ்தியர் தேவாலயத்தில் நடைபெற்றது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான நேற்று, தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தின் மற்றைய இடங்களுடன் நோக்குமிடத்து, வல்வெட்டித்துறைப் பிரதேசமானது குறிப்பிடக்கூடிய நெருக்கலான வீடுகளை சிறிய நிலப் பரப்புகளுக்குள் கொண்டுள்ளது. குடும்பங்கள் பல்கிப் பெருகியுள்ள இன்றைய நிலையில், ஒரு கல்யாண வைபவத்தையும் மற்றும் அதனுடன் கூடிய சபையையும், சில 100 குடும்பங்களை அழைத்து மேற்கொள்வது என்பது மிகவும் அசெளகரியமாக மாறியுள்ளது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று, தேர் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வருடத்தில் பொதுவாக அதிகளவு பக்தர்கள் பங்குகொள்ளும் நிகழ்வு இதுவாகும்.
நல்லவை பல புரிந்து நம்மை அணைத்திற்கும் அருளாளன்
தம் கருணை வெள்ளத்தில் எம்மை ஆழ்த்தி நிற்கும் தங்காளன்
தொல்லை பல எமக்குற்ற போதும் எமைக்காத்து நிற்கும் நம்பன் -----கவிதை - திரு.வ.ஆ.அதிரூபசிங்கம்.
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் பங்குபெறும் உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டங்கள் 24/3/2013 அன்று மாலை வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
வாசகர்களின் தரமான தமிழ் மனம் வீசும் கவிதைகளை எமது இணையத்தில் நிரந்தரமாகப் பதிவாக்கிக் கொள்ளும் நோக்குடனும், மற்றும் கவிதாசிரியர்களின் கவிதைகள் பல பாகங்களிலுமுள்ள பலரையும் சென்றடைவதற்காகவும், தமிழ் வளர்ச்சிக்கு நாம் செய்யும் சிறிய முயற்சி எனக் கருதியும், எமது இணையதளத்தில் 'கவிதைகள் ' (Poems) எனும் புதிய பகுதியை உருவாக்கியுள்ளோம்.
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் பங்குபெறும் உதைப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியின் அறையிறுதியாட்டங்கள் 22/3/2013 அன்று மாலை வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றன.
இங்கிலாந்தில் வாழும் எம் இன மாணவர்களின் கணித, எண்ண வளர்ச்சிக்காக கணிதப் போட்டி - 2013 (Mathematics Challenge - 2013) எதிர்வரும் 15 ஜூன் 2013 அன்று நடைபெறவுள்ளது.
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டும்விழா 23/11/2012 அன்று நடைபெற்றது. இக்கல்யாண மண்டபத்தின் கட்டிட வேலைக்கான நிதி உதவியை வல்வைப் பொது மக்களிடமும், வல்வை சார் சர்வதேச பொது அமைப்புக்களிடமும், புலம்பெயர்ந்து வாழும் வல்வை மக்கள்டமிருந்தும் வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினர் எதிர்பார்க்கின்றனர்.
வல்வையில் துரிதமாக நடைபெற்று வரும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி முன்னேற்றத்திட்டத்தின் ( NEL SHP) வேலைத்திட்டங்களை நேற்று உலக வங்கியின் உயர் மட்ட குழுவினர் பார்வையிட்டு சென்றனர்.
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஆகமச்சித்திரங்கள் பாகம் -7 (சிவ மூர்த்தங்களும், சிவ தத்துவங்களும்) என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டது. இந் நூல் வெளியீடு வில்லிசை சக்கரவர்த்தி கலைமாமணி டாக்டர்.சிவஸ்ரீ.சோமாஸ்கந்த குருஜி (கனடா) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர்கள் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் கட்டுத்தேர் அம்பாளுக்கும், சித்திரத்தேர் பிள்ளையார்மற்றும் முருகனுக்குமாக செய்யப்பட்டுள்ளது.
பண்பிலும், பாரம்பரியத்திலும் பாரினையே வியக்க வைத்த பெருமையும் நமக்குண்டு. எம் கலைஞர்களின் பல நாடகங்களும் ,காத்தவராயன் கூத்துக்களும் காவியங்களாக மாறி சாதனைகள் படைத்த பெருமையும் எமது ஊரில் தான். எதற்கும் குறைவில்லாத எமது ஊரில், கடந்த மூன்று வருடங்களாக தை மாதத்து முதல்நாளில் எமது மன்றம் கலைப்பெருவிழா நடாத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.
தொண்டமானாறு தச்சன் கொல்லை சித்தி விநாயகர் ஆலயத்தின் எண்ணைக்காப்பு நேற்றுகாலை
8 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. இன்று திருக்கோயில் புனனாவர்த்தன அஸ்டபந்தன பஞ்ச குண்டல திதிதல ராஜ கோபுர மகாகும்பாபிஷேகம் 9.45 மணிமுதல் 10.47 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் புதிய மாடிக் கட்டிடம், பொது நூலகம் ஆகியவை 18ம் திகதி முதல் புதிய கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியுள்ளன. போர்க்காலத்துக்கு முன்னர் பருத்தித்துறை கடற்கரை வீதியில் இருந்த பருத்தித்துறை நகரசபை அலுவலக கட்டடம் முற்றாக சேதமடைந்திருந்தது.
Dr. மயிலேறும் பெருமாள் உடலுக்கு மட்டும் அல்ல, உளவளத்துணையும் மக்கள் ஆதரவுடன் சபைகள் அமைத்து தலைவனாக இருந்து ஆன்மீக வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும், அளப்பரிய சேவை ஆற்றுகிறார். கல்வி, விளையாட்டு புதிய ஆக்கங்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களுக்கு சபை மூலம் பரிசுகளும் வழங்கி முன்னேற்றத்திற்கு வழி வகுத்து வருகிறார்.
இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் நேற்றைய உதைபந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் தோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை (Valvai sport club ) எதிர்த்து அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகம் ( Alvai Manokara sport club ) மோதியது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.