Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
சிதம்பராக் கல்லூரி நலன் விரும்புவோர் வலையமைப்பானது (CWN - Chithambara well wishers network), தனது இணையதளமான http://www.cwnetwork.co.uk இல், கல்விசார் தகவல்கள் பல இணைப்பதை, CWN இனர் ஆரம்பித்துள்ளனர்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் 11.04.13 அன்று 11 காலை மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இவ் வருடாந்த மகோற்சவத்தை விளக்கும் வகையாக கீழ் வரும் கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது. வல்வையெம்பதியினிலே மனமுவந்து வந்தமர்ந்தது, வல்வைக்கு வாழ்வளித்த மாரியம்மையின் மகோற்சவகாலத் திருவிழாக்கள்.
ஆக்கம் -திரு.வ .ஆ.அதிரூபசிங்கம் .
வல்வெட்டித்துறைச் சேர்ந்த திருமதி நந்தகுமார் அமிர்தகுமாரி நேற்று (10/04/2013, புதன்கிழமை) கொழும்பில் காலமானார். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டஇவர் 'பபி அக்கா' என்று பொதுவாக மற்றவர்களால் அழைக்கப்பட்டு வந்திருந்தார்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று 11.04.13 காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பதினைந்து நாட்கள் நடைபெறவுள்ள இம்மகோற்சவத்தில், தேர் திருவிழா புதன்கிழமை (24.04.2013) அன்றும், அதனைத் தொடர்ந்து தீர்த்தத் திருவிழா வியாழக்கிழமை (25.04.2013) அன்றும் நடைபெறவுள்ளது.
எமது இணையதளத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே பக்கத்தில் பல செய்திககள், சந்திர உதயம் மற்றும் சந்திர அஸ்தமனம், அதிக Face book முகங்கள், வாசகர் கருத்துக்கள் போன்றவை இவற்றில் சிலவாகும்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் நாளை 11.04.13 கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் நடைபெறவிருக்கிறது. இதன் முன்னிகழ்வாக நேற்று காத்தவராய சுவாமி வீதி உலா நிகழ்வு நடைபெற்றிருந்தது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 11.04.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்த மகோற்சவத்தை முன்னிட்டு காத்தவராய சுவாமி விதி உலா நிகழ்வு நடைபெற்றது
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டும் விழா 23.11.2012 அன்று நடைபெற்றது யாவரும் அறிந்ததே. தற்பொழுது இக் கல்யாண மண்டபத்தின் ஆரம்பக் கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை கீழுள்ள படங்களில் காணலாம்.
நடந்து முடிந்த G.C.E (O/L) பரீட்ச்சையில், வல்வை சிவகுரு வித்தயாசாலை மாணவி செல்வி கணேசலிங்கம் கேசவி அவர்கள் 9 பாடங்களிலும் A பெற்று சித்தியடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 11ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24ஆம் திகதி தேர்த் திருவுழாவும், 25ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
வல்வை மண்ணில் பூப்பந்தாட்டம் ஏன் வளரவில்லை என்று வாசகர் ஒருவர் வினா எழுப்பியுள்ளார். அவர் எமக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் "பெண்களுக்கு ஏற்ற இந்த (பூப்பந்தாட்ட) விளையாட்டுக்கு முக்கியம் கொடுக்காமல், ஆண்களுக்கேற்ற கரப்பந்தாட்ட விளையாட்டை, ஏன் ஊரில் பெண்களுக்கு பழக்கி, போட்டிகளுக்கு கொண்டு போகின்றார்கள்?'' என குறிப்பிட்டுள்ளதுடன் ...
பருத்தித்துறை இளையோர் கழகத்தினால் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்று வந்தது.
வல்வெட்டித்துறையில் NELSIP (North East Local Services Improvement Project - வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நண்பகல் 12 மணியளவில் நாட்டப்பட்டது.
வல்வெட்டித்துறையில் NELSIP (North East Local Services Improvement Project - வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாடும் வைபவம் இன்று நடைபெறவுள்ளது.
VEDA கல்வி நிலையத்தில் 2012 இல் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய 24 மாணவர்களும் க.பொ.த (உ/த) பிரிவில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதை VEDA கல்வி நிலையம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றது.
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் தாய் சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாக சபைக்கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு, கொழும்பு பழைய மாணவர் மன்றத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காய்கறிச் சந்தை இதுவரை நடைபெற்று வந்த இடத்தில், புதிய சந்தைக்கான கட்டிட வேலைகள் ஆரம்பித்துள்ள காரணத்தால் சந்தையானது தற்காலிகமாக பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இயங்கி வருகின்றது.
அனைத்து பாடசாலைகளுக்கும் 1ம் தவணை விடுமுறை காலம் இன்றிலிருந்து (05.04.2013) ஆரம்பிக்கின்றது. மீண்டும் 2ம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் 22.04.2013ல் (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படும்.
2012 ஆம் ஆண்டுக்கான க .பொ .த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன . இத் தகவலைப் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவத்தில் (சமூக சேவைகள் அமைச்சு) பணிப்பாளர் - நிர்வாகமும் நிதியும், பணிப்பாளர் - பயிற்சி, பணிப்பாளர் - (சமூக அபிவிருத்தி, கொள்கை ஆராய்ச்சி மற்றும் வெளியீடு), பதிவாளர் II, உதவி நூலகர் II, சிரேஷ்ட விரிவுரையாளர், சிரேஷ்ட பயிற்சி உத்தியோகத்தர்,
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக அரச கரும மொழிகள் தேர்ச்சிப்பரீட்சைக்கு அரசாங்க சேவையிலுள்ள அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. 07/2007 என்னும் சுற்றறிக்கைப் படி 5 வருடங்களுள் அரச கரும மொழித் தேர்ச்சியை பூரணப்படுத்த வேண்டிய அரச (Semi Government) சேவையிலுள்ள அலுவலர்களும், ஆசிரியர்களும் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் .
அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடர் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் வல்வை B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சல் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சல் விளையாட்டுக்கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 20 வருடங்களாக, மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி 02.04.2013 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் கணிதபாட ஆசிரியரும், பகுதித்தலைவருமாகிய (இடைநிலை ) திருமதி சரசரத்தினம் புலேந்திரலிங்கம் (SLTSI, Trd.Maths) அவர்களின் சேவையைப் பாராட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 20 வருடங்களாக, மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி 02.04.2013 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் கணிதபாட ஆசிரியரும், பகுதித்தலைவருமாகிய (இடைநிலை ) திருமதி சரசரத்தினம் புலேந்திரலிங்கம் (SLTSI, Trd.Maths)அவர்களின் சேவையைப் பாராட்டி நாளை மதியம் 12.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.