உலகின் மிகப் பெரிய பாய்மர சரக்குக்கப்பல் உதயமாகவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2017 (புதன்கிழமை)
உலகின் மிகப் பெரிய பாய்மர சரக்குக்கப்பல் (world’s largest sailing cargo ship) உதயமாகவுள்ளது. நான்கு பாய்மரங்கள் கொண்டு கட்டப்படவுள்ள இந்தக் கப்பல் 2000 வாகனங்களை காவக் கூடியனவாகும்.
170 மீட்டர் நீளமான இந்தக் கப்பல் ஹைபிரிட் உந்துகை, பாய்மரங்கள் மற்றும் டீசல் மின் இயந்திரங்களுடன் தேவைப்படும் பட்சத்தில் மின்கலங்கள் பாவிக்கக் கூடிய வகையில் (Hybrid propulsion with sails and diesel-electric engines, and an optional battery system for peak loads) வடிவமைக்கப்படவுள்ளது.
ஆரம்பத்தில் மணிக்கு 10 - 12 கடல் மைல் வேகத்திலும் அதன் பின்னர் சில வருடங்களில் மணிக்கு 14 - 16 கடல் மைல் வேகத்திலும் இந்தக்கப்பல் இயக்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.