கடந்த 21 நாட்கள் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலிலும் நடைபெற்றுவந்த விநாயகர் சஷ்டி விரத இறுதி நிகழ்வான கஜமுகாசூரன் போர் நேற்று நடைபெற்றது.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலிலிருந்து வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் வந்தடைந்த பின் வல்வை அம்மன், சிவன் கோயில்களைச் சுற்றி உலா வந்த பின் கஜமுகாசூரன் போர் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மேற்கு வீதியில் மாலை 07:30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
கஜமுகாசூரன் போர் முடிவடைந்து சுவாமி, மீண்டும் சுமார் இரவு 8 மணியளவில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் சென்றடைந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.