நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவான முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாளர்களாலும், மக்களாலும் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உறுப்பினர் எஸ். செல்வேந்திரா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வெடிகள் கொளுத்தியும், பொன்னாடைகள், மலர்மாலைகள், அணிவித்தும் நீதியரசர் விக்னேஸ்வரன் வரவேற்கப்பட்டார்.
நிகழ்வில் ஆசியுரையை வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு சோமாஸ்கந்த தண்ட பாணிக தேசிகர் ஆற்றினார்.
நீதியரசர் விக்னேஸ்வரன் சிறப்புரை நிகழ்த்தினார். வெற்றிக்காக உழைத்த ஆதரவாளர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் அவர் தனதுரையில் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.பி.சிவநாதன் உரையாற்றியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.