வல்வையைச் சேர்ந்த வெற்றிவடிவேல் ராஜேந்திரன் தேங்காய் உரிக்கும் மிகவும் எளிய முறையில் அமைந்த கருவி ஒன்றைக் கண்டு பிடித்துள்ளார். மின்வலு அன்றி மனித வலுவில் இயங்கும் இந்தப் பொறிமுறையில் தேங்காய் ஒன்றின் தோலை வெறும் மூன்று தடவைகளில் உரிக்கமுடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: October 19, 2018 at 17:52
“ A SHARP KNIFE IS A CHEF’S BEST FRIEND “ என்பது ஒரு ஆங்கிலப்பழமொழி.
.
எமது நன்பர் ரகு தனது அறிவார்ந்த ஆற்றலை பயன்படுத்தி தேங்காயை மிகஇலகுவாக உரிப்பதற்காக ஒரு புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். அதாவது ஒரு புதிய நன்பனை எமக்காக படைத்துள்ளார்.
.
சமயலறையில் ஒரு கூரிய கத்தி எப்படி எமக்கு ஒரு நன்பனாக உதவி செய்கின்றதோ அதேபோல இனிமேல் எமது நன்பர் ரகுவின் இந்த புதிய எந்திரனும் எமது சமையலுக்கு உதவிசெய்யப்போகிறார்.
.
முதலில் எமது நன்பர் ரகுவுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
அத்துடன் அவர் மேலும் இதுபோன்ற பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சாதனைகள் பல படைக்க எமது நல்வாழ்த்துக்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.