பசுமைப்புரட்சி என்னும் கருப்பொருளில் இன்றைய பரிசளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2019 (சனிக்கிழமை)
வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழக 57 ஆவது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
இதன் வரிசையில் இன்று ஆண் பெண்களுக்கான மரதன் மற்றும் கழக அஞ்சல் ஓட்டம் இடம்பெற்றன. போட்டிகளைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
மரங்களை வளர்க்கும் நோக்குடன் பசுமைப் புரட்சி என்னும் கருப் பொருளில் வெற்றி யாளர்களுக்கு பயன்தரு மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.
அடுத்த வருடம் வழங்கப்பட்ட மரக் கன்றுகள் பார்வையிடப்பட்டு, குறித்த மரத்தினை உரிய முறையில் வளர்ப்பவர்களுக்கு மீண்டும் பரிசில்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.