நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுக் காரணமாக காலமான வல்வை நகரசபைத் தலைவர் திரு.கோ.கருணாநந்தராசாவின் தகனக் கிரியைகள் இன்று முற்பகல் யாழ் கோம்பயன் மின் மயானத்தில் கொவிட் தடுப்பு விதிகளுக்கு அமைய இடம்பெற்றது. இறுதிக் கிரியைகளில் நெருங்கிய உறவினகள் நால்வர் பங்கு கொண்டனர்.
இறுதிக் கிரியைகளைத் தொடந்து அன்னாரின் அஸ்தி பிற்பகல் இரண்டு மணியளவில் வல்வை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் கரைக்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட்ட நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.