2022 ஆம் ஆண்டுக்கான வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் 30 ஆம் திகதி முற்பகல் மீண்டும் இடம்பெறவுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி, வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, 2 ஆவது முறையாக வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
சுஜேட்சைக்கு ஆதரவு அளித்த வல்வை நகரசபை பிரதி தவிசாளரும் தமிழ தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருமான திரு.ஞானேந்திரன், மீண்டும் கூட்டமைப்பு பக்கம் சென்றதால் வரவு செலவு திட்டம் கடந்த முறை தோற்கடிக்கப்பட்டது.
நாளை மறுதினமும் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால், தற்போதைய நகரசபைத் தவிசாளர் திரு. செல்வேந்திரா அவர்கள் பதவி விலக நேரிடும்.
17 உறுப்பினர்கள் கொண்ட சபையில், கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேருக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவர், நாளை மறுதினமும் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு கூட்டமைப்பு வெற்றிபெறுமாயின், தவிசாளர் பதவியை எதிர்பார்த்து நிற்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களான திரு.ஞானேந்திரன் திரு.சதீஷ், மற்றும் திரு.சிவா ஆகிய மூவரில் ஒருவர் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பாடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.