வல்வை நகரசபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. வாக்கெடுப்பில் சுஜேட்சைக் குழுவின் நால்வர், ஈ.பி.டி.பி இருவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருவர் என பேர் ஆதரவாகவும், கூட்டமைப்பின் 7 பேரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 பேரும் எதிராக வாக்களித்ததால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நகரசபைத் தலைவர் திரு.கருணாநந்தராசா அவர்கள் கொரொனா தொற்றுக் காரணமாக காலமானதை அடுத்து, 2 மாதங்கள் முன்பு இடம்பெற்ற இடைத் தேர்தலில் சுஜேட்சைக் குழுத் தலைவர் திரு.செல்வேந்திரா அவர்கள் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரான திரு.ஞானேந்திரனின் ஆதராவால் தவிசாளாராகத் தெரிவானார்.
கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது வாக்கெடுப்பிலும், இன்று இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பிலும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால், திரு.செல்வேந்திரா தலமையிலான சுஜேட்சைக் குழு பதவி விலகுகின்றது..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ramaratnam Vyramuthu (Danmark)
Posted Date: December 01, 2021 at 01:26
கவலைக்குரிய விடயம்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.