வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 1030 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா இடம்பெற்று பகல் திருவிழா சுமார் 3 மணியளவில் நிறைவெய்தியது.
திருவிழாவின் பின்னர் அடியார்களிற்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் சப்பறம், தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் எதிர்வரும் 27,28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.