வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
வரும் 12 ஆம் திகதி மாரிதேவி உற்சவத்தை தொடர்ந்து 16 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள உற்சவத்தின் தேர் திருவிழா 30 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா அடுத்த நாள் 31 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
உற்சவங்கள் யாவும் முற்பகல் 10 மணிக்குள்ளும் இரவு 12 மணிக்குள்ளும் இடம்பெறும் என ஆதீன கர்த்தாக்கள் அறிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.