வல்வை ஸ்ரீவாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் தேர் உற்சவம் இன்று இடம்பெற்றது (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2017 (திங்கட்கிழமை)
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானதுமான, வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று அழித்தல் திருவிழாவான தேர்த் திருவிழா விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை சுமார் 0830 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி 09.30 மணியளவில் தேரில் ஏறினார். அதனைத் தொடர்ந்து சுமார் 11.00 மணியளவில் பிள்ளையார் தேர் வடத்தினை பெண்கள் சிறுவர்கள் இழுக்க மற்றைய தேர்களை ஆண்கள் இழுத்தனர்.
சுவாமிகள் பஞ்ச ரதங்களில் ஏறி வீதி உலா வருகை நண்பகல் அளவில் இடம்பெற்றிருந்தது. இன்றைய இத்தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர் திருவிழா முடிவடைந்ததும் பக்தர்களுக்கு இரு அன்னதான மடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்றைய தேர் வீதியுலாவின் போதும் நேற்று முன்தினம் உற்சவத்தில் கலந்து கொண்ட போலந்து நாட்டைச் சேர்ந்த 3 ஆடவர்கள் வடம் பிடித்து தேர் இழுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.