வல்வை மாலுமிகள் சங்க முன்னாள் செயலாளர் சண்முகதாஸ் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2016 (வியாழக்கிழமை)
வல்வை மாலுமிகள் சங்க (வைஸ்வா) முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் செயலாளருமாகிய திரு.இரத்தினசாமி சண்முகதாஸ் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 65. நீயூமோனியா காய்ச்சல் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே வைத்தியசாலையில் அதிகாலை 1 மணியளவில் காலமானார்.
திரு.சண்முகதாஸ்
மூத்த மாலுமியான சண்முகதாஸ், வல்வை மாலுமிகள் சங்கத்தின் செயற்பாடுகளில் அன்று முதல் இன்று வரை அதிக அக்கறை காட்டி வந்தவர் ஆவார்.
திரு.சண்முகதாஸ் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவரின் இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது, விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S.sivanesan (Srilanka)
Posted Date: June 02, 2016 at 18:40
Shanmugathas has worked with me as 3rd engineer in Greek vessels.he was very hardworking and persevering .he was a very friendly and respectful person.at ports he used to cook by himself and entertained the fellow crew members on many occassions.he actively participated in all Vaiswas functions.
I sincerely pray god to him eternal peace in heaven.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.