கம்பர்மலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் நடமாடும் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2016 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை பொலிசாரின் நடமாடும் சேவை நேற்று முதல் கம்பர்மலையில் கலாவாணி சன சமூக நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட இந்த நிகழ்வில், வல்வெட்டித்துறைப் பொலிஸ் அதிகாரி, கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலய குருக்கள், திடீர் மரண விசாரணை அதிகாரி திரு வே .பாஸ்கரன், கலாவாணி சன. சமூக நிலையத் தலைவர் திரு.சி.தயானந்தராசா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், உடுப்பிட்டி வடக்கு சிவில் பாதுகாப்புக் குழு தலைவர் திரு . சதீஸ், திரு. வே. கஜேந்திரன், கம்பர்மலை மகா வித்தியாலாய அதிபர் ரவீந்திரன், உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபர் சக்திவேல், ஓய்வு பெற்ற உடற்கல்விப் பணிப்பாளர் திரு . வல்லிபுரம், கலாவாணி முன்பள்ளித் தலைவர் திரு. சி. மயூரன், முதியோர் சங்கத்தலைவர் திரு.ஆ . யோகேந்திரம், நீதி தேவி சன சமூக நிலையத் தலைவர் திரு. ஸ்ரீஸ்கந்தராசா, பொன்கந்தையா சன. சமூக நிலையத்தலைவர் திரு. தங்கேஸ்வரலிங்கம் , உடுப்பிட்டி வடக்கு மாதர் சங்கத் தலைவி திருமதி.யோகராணி , உடுப்பிட்டி வடகிழக்கு மாதர் சங்கத் தலைவி திருமதி. சுலோஜினி மற்றும் பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.
குறித்த இந்த நடமாடும் சேவையானது ஒரு மாத காலத்திற்கு இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.