வல்வெட்டித்துறை ஊறணி புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள மண்டப புனரமைப்பு வேலைகள் நிறைவு பெற்று தற்போது வர்ணப்பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றது.
மேற்படி புனரமைப்பு வேலைகள் யாவும் மட உரித்தாளர்களின் நிதி அனுசரணையுடனும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ M.K.சிவாஜிலிங்கம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தற்போதைய வர்ணப்பூச்சு வேலைகளை மட உரித்தாளர்களின் அனுசரணையுடன் தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் இம்முறை 60 வருடங்களிற்கு ஒருமுறை நிகழும் மஹோதய புண்ணிய திர்த்தத்திற்காக எதிவரும் 04.02.2019 அன்று வல்வையிலும், அயற்கிராமங்களிலுமுள்ள 13 உற்சவ மூர்த்திகளின் தீர்த்த உற்சவம் இங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.