நெடியகாடு கலாமன்றத்தின் “வெள்ளைமலர்கள்” திரை நாடகம் நேற்றையதினம் முன் இரவு வேளையில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் மக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட இருந்தது, இந்நிலையில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் மறு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலநிலை சீரானதும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு அதே இடத்தில் நாடகம் திரையிடப்படும் என நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தினர் அறிவித்துள்ளனர்.
கடந்த சிலதினங்களாக வடகீழ் பருவக்காற்று காரணமாக வடக்கு மாகனத்தின் பலவேறு இடங்களில் மழை பெய்துவருகின்றது. வல்வெட்டித்துறையிலும் காலநிலை மாற்றம் காரணமாக மழை பெய்து வருகின்றது, நேற்றையதினமும் பகல் மற்றும் இரவு வேளைகளில் பலத்த மழை பெய்தது.
“வெள்ளைமலர்கள்” திரை நாடகத்துடன் தொடர்புடைய எமது செய்தி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.