வடமாகாண கடற்கரை கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டிகள் இன்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றது.
ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயத்தை எதிர்த்து பளை மத்திய கல்லூரி மோதியது. ஆட்டத்தில் 2 : 1 என்ற செற் கணக்கில் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. 3 ஆம் இடத்தை கிளிநொச்சி பாரதி வித்தியாலயம் பெற்றுக் கொண்டது.
பெண்களுக்கான போட்டியில் 1 ஆம் இடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும், 2 ஆம் இடத்தை வவுனியா ஸ்ரீ சமனைய கல்லூரியும், 3 ஆம் இடத்தை பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியும் பெற்றுக் கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.