Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வையின் இந்திர விழா – வல்வையூர் அப்பாண்ணா

பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2018 (செவ்வாய்க்கிழமை)
வல்வையின் இந்திர விழா
வல்வையூர் அப்பாண்ணா
முன்னுரை 
 
வருகிறது... வருகிறது... அம்பாள் திருவிழா வருகிறது என ஊரவர்களாலும் – புலம்பெயர் நம்மவர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட அம்பாள் திருவிழா தொடக்கி 14 நாட்கள் பறந்தோடி “இந்திரவிழாவும்” வந்து சேர்ந்தது 29-04-2018 ஞாயிறன்று அம்பாள் தீர்த்தோற்சவம் – புலம்பெயர்ந்த நம்மவர்களின் பெருமளவு வருகையினால் கலகலப்பாக கழிந்தது. பகல் நேரக் கொளுத்தும் வெய்யிலின் கொடுமை தாங்கமுடியாமல் கூட்டம் குறைவாக இருந்த போதும், இரவுத்திருவிழாப் பார்க்கப் படிப்படியாகக் கூட்டம் அதிகரித்து வேட்டைத் திருவிழா முதற்கொண்டு தினமும் இரவுத் திருவிழாவிற்கு வீதி நிறைந்த மக்கள் கூட்டமாக “இந்திரவிழா” வோடு உச்சம் தொட்டு நின்றது.   
 
வேட்டைத் திருவிழா
 
நீண்ட காலத்தின் பின்னர் இவ்வருட வேட்டைத் திருவிழாவிற்காக ஊரவர்களும் –புலத்திலிருந்து  வந்தவர்களுமாக, பிள்ளையாரின் மேற்கு வீதி தவிர்ந்த ஏனைய மூன்று வீதிகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தெற்கு வீதியில் வில்வ மரத்தடியில் வைத்து வழங்கப்பட்ட சூடான காப்பி – ஜஸ் காப்பி அருந்தி அனைவரும் தாகம் தீர்த்தனர். “இந்திரவிழா”வின் இரவு நேர ஒளி அலங்காரங்களின் முக்கிய அம்சங்களை வேட்டைத் திருவிழாவன்று வெளிப்படுத்தி நம்மவர்களின் பார்வைக்கு வைப்பது கணபதி மின் அமைப்பாளர்கள் கடந்த பல வருடங்களாக கடைப்பிடிக்கும் உத்தி. 
 
இது உண்மையில் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியதே. நெரிசலின்றி – இடிபாடின்றி – ஆறுதலாக –நேர்த்தியாக தத்தமது கையடக்கத் தொலைபேசிகளில் பார்த்தவைகளைப் பதிவு செய்ய இது அரிய வாய்ப்பாக அமைந்தது. அன்றும் இந்திரவிழாவின் மூன்று முக்கிய அம்சங்களைப் பார்வைக்கு வெளிப்படுத்தினர். மேர்மடத்திற்கு மேலாக இறகு விரித்தாடும் அன்னப்பறவை, அன்னதான மடத்திற்கு மேற்காக உயரத்தில் சுழலும் மின்னமைப்பு, பிள்ளையார் ஈசான மூலையில் “LONDON EYE”  போன்ற அமைப்பில் மேற்கு நோக்கிய திசையில் சுழன்று கொண்டிருந்த மின்னமைப்பும் கண்களைக் கட்டிப்போட்டன. இவற்றிற்கு மேலாக, தெற்கு வீதி முழுவதும் இரு புறமும் வரிசையாக வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு மின் அலங்காரமும், அந்த அமைப்பினூடாக அம்பாள் மோர் மேடம் நோக்கிய  வருகையின் அழகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. 
 
இந்திரவிழாவின் காலைப்பொழுது 
 
பொழுது புலர்ந்து விட்டது அம்பாள் கோவிலிருந்து ஊறணி வரையிலான பல்வேறு இடங்களிலும் அம்பாளை வரவேற்கும் முன்னேற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்றன. காலை 7 மணி அம்பாளை அழைத்து போவதற்காக நெடியகாட்டிலிருந்து 10 கூட்டு பறை மேளங்களின் விண்ணதிரும் முழக்கத்துடன் வரிசை கட்டி வந்து சேருகிறது. இந்திர விமானத்தில் அம்பாள் அழகு தேவதையாகப் புறப்படுகின்றாள். ஊரின் ஒவ்வொரு முகப்பிலிருந்தும்  மக்கள் கூட்டம் கூட்டமாக அம்பாளின் தீர்த்த ஊர்வலத்தில் இணைந்து கொள்ள தீர்த்த ஊர்வலம் ஊறணிக் கடற்கரை நோக்கி நகர்ந்தது. 
 
அம்பாள் ஊர்வலம் வேம்படியில் தரித்து நின்று தாகசாந்தி முடிந்து, நெடியகாடு மோர் பந்தலில் நின்ற வேளை, பிள்ளையார் தெற்கு வீதியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட 60 அடி உயரமான புகைக்கூண்டும், சிறு சிறு புகைக் கூண்டுகளையும் பார்த்து மக்கள் மகிழ்வெய்தினர். சித்திரா பௌர்ணமி விரத நாளும் – அம்பாள் தீர்த்தோற்சவமும் இணைந்து வந்ததால் – அலை கடல் என திரண்டு வந்த மக்கள் கூட்டத்தின் ஊறணி நோக்கிய நகர்வினை மகளிர் மைதானத்தில் ஓரமாக நின்று அவதானிப்பவர்களுக்கு அதன் அழகு நன்கு புரியும்.

அம்பாள் ஊறணி தீர்த்தக் கடற்கரை வந்து சேரும் முன்பாகவே, சித்ரா பௌர்ணமி    விரதகாரர்கள் பலரும் – தமது பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்காக – தெர்ப்பை அணிந்து கடலில் நீராடித் திரும்பியதையும் அவதானிக்க முடிந்தது. தீர்த்தமடமருகே கிழக்காக பறை மேளச் சமா உச்சம் தொட்டு நின்றது. 

தீர்த்த மடத்தின் தென்புறமாக வழங்கப்பட்ட செறிவான நீர் மோரும் – குளிபானமும் அருந்தி ஆறுதடைந்த பெண்கள் தீர்த்த மடத்தின் மேற்காக பசுமையாக நின்றிருந்த ஆலமர நிழலில் ஒதுங்கி ஆறுதல் பெற்றனர். ஆனால் ஆண்கள் கொளுத்தும் வெய்யிலில் ஒதுங்க இடமின்றித் தவித்தனர். எதையும் சாதனையாக்கும் வல்லமை கொண்ட நெடியகாடு இளைஞர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கின்றேன்.
 
 
பழைய அந்தியேட்டி மடத்திற்கும் பட்டுப்போன தற்போதுள்ள மரத்திற்கும் இடைப்பகுதியில் ஒன்றும், புதிய அந்தியேட்டி மடத்திற்கு வடக்காக இன்னொன்றுமாக இரண்டு நிழல் மரக் கன்றுகள் நாட்டப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது உங்களால் மட்டுமே முடியும். அம்பாள் திருவிழா தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னரே தீர்த்தக் கடலையும் – கடலின் கரையையும் சுத்தப்படுத்தும் வேலையில்  நெடியகாடு இளைஞர்கள் ஈடுபட்டிருந்ததை நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.
 
தீர்த்த மடத்தில் அம்பாளுக்கான அர்ச்சனை காரியங்களை நிறைவு செய்தவர்கள், வெய்யிலின் கொடுமைக்குப் பயந்து சாரி சாரியாக மேற்கு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அதனால் கணபதி படிப்பகத்தருகே  - பிள்ளையார் வடக்கு வீதியில் அம்பாளுக்கு அளிக்கப்பட்ட நிறைகுட வரவேற்பினை (விபரம் பின்னே வருகிறது). மிகச் சிலரே காணும் வாய்ப்புப் பெற்றனர். 
 
வரவேற்பும் வழியனுப்பும் 
 
ஊறணியில் தீர்த்தமாடி சர்வ அலங்கார பூஜிதையாக இந்திர விமானத்தில் ஆரோகணித்த அம்பாளுக்கு பிள்ளையார் வடக்கு வீதியில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வும், மீண்டும் இரவு நடைபெற்ற வழியனுப்பு நிகழ்வும் பலரையும் கவரும்படி அமைந்திருந்தது. பக்கத்திற்கு பதினைந்து பேர்களாக திருமணமான சில பேருடன் கன்னியர்கள் பல பேருமாக முப்பது இளம் பெண்கள், சிவப்பு – மஞ்சள் சேலை அலங்காரத்துடன் கைகளில் நிறைகுடங்களை ஏந்தியபடி வரிசையாக – வண்ணமாக அம்பாள் அருகே நடந்து வருகின்றார்கள். அம்பாள் உள்ளே வந்து அமர்ந்து கொண்டதும், வரிசையாக அம்பாளை வலம் வந்து – அம்பாளுக்கு முன்பாக இரண்டு வரிசைகளில் நிறைகுடங்கள் வைக்கப்பட்டன. 

இரவு 07.05 மணிக்கு நெடியகாடு பிள்ளையார் கோவிலிருந்து அம்பாள் புறப்படுகின்றாள். சிறுவர் பாடசாலை செல்லும் வயதினை உடைய  சின்னஞ்சிறு பெண் குழந்தைகள் பக்கத்திற்கு பத்து பேராக பிஞ்சுக் கரங்களில் பூந்தட்டங்களை ஏந்தியபடி அம்பாளுக்கு முன்பாக வரிசையாக நடந்து வருகின்றார்கள். அழகிய மின் அலங்கார வளைவுடனான விசேட பந்தலில் (பிள்ளையார் தென்கிழக்கு மூலையில்) அம்பாள் அமர்ந்து கொள்ள, அம்பாளுக்கு முன்பாக இரண்டு வரிசைகளில் நின்றபடி பூச்செரிந்ததுடன் வழியனுப்பும் வைபவம் நிறைவுக்கு வருகிறது. 

 
மோர் மடம் முன்பாக போடப்பட்டிருந்த அகன்ற பந்தலில் – பல்வேறு வாத்தியங்களுடனான நாதஸ்வர நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
 
101  அடி புகைக்கூண்டு  
பல இளைஞர்களின் – இரவு பகல் பாராத பல வார கால உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்ட 101 அடி உயரமான புகைக்கூண்டு -  அம்பாள் பந்தலுக்கு வந்து சற்று நேரத்தில் – வானில் பறக்க விடுவதற்கான ஆயத்தங்கள் நடந்தது. முழுமையாக புகையேறிய புகைக்கூண்டு அதன் 101 அடி உயரத்தைத் தொட்டு நின்ற சில நிமிடங்களில் மேலிருந்து கீழாக சரி பாதியாகப் பிளந்து  சரிந்து வீழ்ந்தது. புகைக்கூண்டு வானில் பறப்பதைப் பார்ப்பதற்குக் கூடியிருந்த பல்லாயிரக்கான மக்கள் எதிர்பாராத இந்நிகழ்வினால் பதட்டமடைந்தனர். இறுதிக் கட்ட பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் சாதுரியமான முயற்சியினால் – புகைக்கூண்டின் பெரிய தீப்பந்தம் அணைக்கப்பட்டு – ஏற்படவிருந்த பெரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டது. 
 
 
101 அடி புகைக்கூண்டு வானில் பறப்பதைப் பார்க்க முடியாவிட்டாலும் அதன் முழுமையான – பிரமாண்டமான உயரத்தை நேரில் பார்த்தவர்கள், அந்த இளைஞர்களின் முயற்சியை பாராட்டத் தவறவில்லை. இந்த சம்பவம் நடந்து அரை மணி நேரத்தில், 50 அடி உயரமான புகைக்கூண்டு வெற்றிகரமாக வானில் ஏவப்பட்ட போது, முந்தய ஏமாற்றத்தை மறந்து – மகிழ்ந்து – சிரித்து -   கைத்தட்டி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
 
நால்வகை மின் அலங்காரம் 

 

வேட்டைத் திருவிழாவன்று நம்மவர்கள் பார்த்து ரசிப்பதற்காகக் காட்சிப்படுத்திய, மோர் மடத்தின் மேலாக வைக்கப்பட்டிருந்த சிறகு விரித்த அன்னப்பறவையின் உருவும், அன்னதான மடத்திற்கு மேற்காக உயரத்தில் சுழன்று கொண்டிருந்த மின் அலங்காரமும், ஈசான மூலையில் புத்தம் புதிதாக – புதுமையாக அமைக்கப்பட்டிருந்த மின் அடுக்கு அலங்காரமும் அனைவரையும் கவர்ந்திழுத்தது. இவற்றில் ஈசான மூலையில் வலஞ்சுழியாகவும்    இடஞ்சுழியாகவும்  சுழன்று பல்வேறு நிறங்களில் மஜாஜாலம் காட்டும் வண்ண அமைப்பு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. கணபதி மின் அறைக்கு அருகே வீதியில் நின்றபடி இதனைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்த என்னைத் தட்டிய  ஒருவர் “கண்களைக் கூசிப் பாருங்கள், அற்புதம் புரியும்” என்றார். நானும் கண்களைக் கூசிப் பார்த்தேன் . உண்மையில் சூரியனின் ஒளிப்பிழம்பைப் போல எதிர் எதிர் திசையில் சுழலும் பல வர்ணங்கள் கண்களுக்கு விருந்தாகும் . அற்புதத்தைக் கண்டேன். சிந்தித்தவ்ர்களுக்கும் – செயற்படுத்தியவர்களுக்கும் ஒரு “சபாஷ்” போடலாம். உங்கள் கை வண்ணம் தொடரட்டும்.
 
மேற்குறித்த மூன்று அலங்காரங்களை விட நான்காவதாக குளத்தருகே கத்தோக்க மரமருகே சுழலும் சிவலிங்கம் அமைக்கப்பட்டிருந்தது. தீருநீற்றுப் பூச்சும் – நடுவே சந்தன குங்கும திலகமும், அருகே சால்வை பூமாலை சூடப்பட்ட உயர்ந்த சூலாயுதமும் சேர்ந்த படி சிவலிங்கம் சுழன்ற வண்ணம் இருந்தது. கத்தோக்க மரத்தின் அடர்த்தியான நிழலும், லிங்கத்தைச் சுற்றிவர சாடிகளில் இருந்த சிறு மரங்களும், கூடுகளில் இருந்த லவ் – பேட்ஸ் கீச் கீச் ஒலியும்,    குறைந்த மின் ஒளியும் ஒரு பக்தி சூழலை ஏற்படுத்தியது. சுழலும் வேகத்தை சற்றுக் குறைத்திருப்பின் இன்னும் அழகாக இருந்திருக்கும்.
 
மக்கள் கூட்டம் 
 
குடா நாட்டு மக்கள் மட்டுமன்றி, குடாநாட்டுக்கு வெளியிலிருந்தும் மக்கள் இந்திரவிழாக்காண திரண்டு வந்தனர். கிழக்கே ஊறணி சுடலைக்கப்பாலும், தெற்கே விநாயகர் வித்தியாலயத்திற்கு அப்பாலும், மேற்கு மயிலியதனைச் சுடலைக்கப்பாலும் வாகனங்களை விட்டு வந்தனர். ஊருக்குள் நுழையும் சகல வீதிகளும், வாகனப் போக்குவரத்துக்காகத் தடுக்கப்பட்டிருந்தது. நமது ஊர் காவற்துறையினருடன், வெளியிலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட காவற்துறையினரும் வீதித்தடையிடங்களில்    கடமையில் ஈடுபட்டிருந்தனர். நவீன சந்தை கட்டிடம் அருகே தீயணைப்பு வண்டியொன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
 
இரு திசைகளிலிருந்தும் சாரிசாரியகத் திரண்டு வந்த மக்கள் கூட்டம் வேம்படிக்கும் பிள்ளையார் கோவிலுக்கும் இடையே சங்கமித்ததால் வீதியில் கால் வைத்து நடக்க முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் அலை மோதியது. நிகழ்ச்சிகள் நடைபெற்ற பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே அமர்ந்திருந்து இளைப்பாறுவதும், பின்னர் தமது நடைப் பயணத்தைத் தொடருவதுமாக இருந்தனர். பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தாக சாந்தி நிலையங்களில் வழங்கப்பட்ட சூடான – குளிரான பானங்கள் களைப்படைந்த மக்களுக்கு பெரும் ஆறுதலாகவிருந்தது.  
 
சந்தியில் ஊரின் அடையாளச்சின்னம் 
 
சந்தியில் பிள்ளையார் கட்டவுட்டருகே வல்வையின் அடையாளச் சின்னமான “அன்னபூரணி” பாய்மரக் கப்பலின் மாதிரி கண்ணாடிப் பேழையில் வைத்து மின்னொளியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அருகே சற்றுப் பெரிய அளவிலான “வல்வை நாயகி” எனும் பாய்மரக் கப்பல் மாதிரியும் வைத்திருந்தார்கள். பாய்மரக் கப்பல் மாதிரிகளின் அழகினை மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்தனர். 
 
கணபதி கோவிற் சுற்றாடல் 
 
பிள்ளையார் கோபுரம், வன்னி மரத்தடி, கோவிலின் பக்க சுவர்கள், பூங்காவனம்,  கணபதி படிப்பகம், கணபதி பாலர் பாடசாலையின் மேல்மாடி என கோவிற் சுற்றாடல்  முழுவதும் ஒளி பெற்றுத் திகழ்ந்தன.  குறிப்பாக வைரவர் அமர்ந்திருக்கும் வேப்ப மரத்தில் தொங்கிய நூற்றிற்கும் அதிகமான பச்சை நிற ரியூப் லைற்றுக்கள் கொள்ளை அழகு காட்டி நின்றன. 
 
கணபதி மின் அறைக்கு எதிரே – வீதியின் மறு கரையில் புத்தம் புதிய 225 K.V மின்வலுக் கொண்ட மின்பிறப்பாக்கி சத்தமின்றி இயங்கிக் கொண்டிருக்க , கணபதி மின் அமைப்பாளர்களின் சிறியதும் பெரியதுமான பத்துக்கும் மேற்பட்ட மின்பிறப்பாக்கிகள் கிழக்கே ஊறணி மடம் முதல் மேற்கே குஞ்சண்ணா கடையடி வரையிலான பகுதியினை இரவைப் பகலாக்கி ஒழி வெள்ளம் பாய்ச்சி நின்றன. 
 
கட் அவுட்டுகள் 
சித்திரமாக வரையப்பட்டிருந்த கட் அவுட்டுகள் (எமது பாஷையில் “போட்டிக்கோ” ) வீதியின் பல்வேறு இடங்களிலும் காணப்பட்டன . குஞ்சண்ணா கடை மூலையில் உயரமான சிவனின் தோற்றம் புலித்தோலாடையும் – முப்பிரிநூலும் – கையில் சூலாயுதமும் தரித்து நின்ற திருக் கோலத்திலும், வேம்படி வீதிக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த வீணை ஏந்திய சரஸ்வதியும் அதன் அடிப்பகுதியில் இரு மருங்கும் கிருஷ்ணரும் – பிள்ளையாரும், மதவடி எஞ்சின் அறை அருகே அம்பாள்  உரு அமைப்பும் காணப்பட்டன. சந்தியில் இருந்த பிள்ளையாரின் பெரிய கட் அவுட் மிக நேர்த்தியாக வர்ணம் தீட்டப்பட்டிருந்ததுடன்  கச்சிதமான உரு அமைப்புடனும் காணப்பட்டது. அதனை உருவாக்கியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 
 
 
லைற் கட் அவுட்டுகள் 
பல்வேறு உருவ அமைப்பில் லைற் கட் அவுட்டுகள் பல இடங்களிலும் காணப்பட்டன. நெடியகாடு சூழலில் காணப்பட்ட லைற் கட் அவுட்டுகளில், வட கிழக்கு மூலையில் (அம்பாள் தரித்து நின்ற பந்தல் வாசலில்) கட்டப்பட்டிருந்த லைற் கட் அவுட்டில் இருந்த நிறங்கள் தெரிவினால் (கலர் பல்ப்) அந்த கட்அவுட்டின் அழகு அற்புதமாகவிருந்தது.  அமுதா உணவகம் முன்பாக இருந்த லைற் கட் அவுட்டு, அம்பாள் வைரவர் வாசலருகே இருந்த சிவன்  – பார்வதி , அம்பாள் கோவிலில் முருகன் சந்நிதியின் மேலே இருந்த அம்பிகை, வாடி ஒழுங்கைக்கு நேராக வீதியை முடியிருந்த வாழைமர வரவேற்பு , J.N.S  கடை வாசலில் இருந்த 45அடி உயரமான அம்பாள் உருவமைப்பு, குமரகுரு வாடியருகே இருந்த உருவத்தில் சிறிய பிள்ளையார் அமைப்பு, சிதம்பர மைதானத்தில் 30 அடி உயரமான கிருஷ்ணன் – ராதையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த லைற் கட் அவுட்டுக்களாகும்.
 
இவற்றுள் திருவிழா ஆரம்பமான நாளிலிருந்தே வாடி ஒழுங்கை வாசலில் வீதியை மூடி கட்டப்பட்டிருந்த வாழைமர அமைப்பின் அழகு கண்டு வியக்காதவர்கள் இல்லை. மங்கல காரியங்களுக்குக் கட்டப்படும்   பாங்கில் வாழைமரம் – வாழைக்குலை – வாழைஇலை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தமை மெச்சத்தக்கது.  J.N.S  கடை முன்பாக அமைக்கப்பட்டிருந்த அம்பாள் உருவின் வலது புறம் வில்லு – உடுக்கு – சக்கரம் – அபயகரம் என நான்கும், இடதுபுறம் கும்பம் – சுடர் -  சங்கு – வாள் என நான்குமாக எட்டுக் கரங்களுடன் சிம்ம வாகனத்தில் அம்பாள் கொலு கொண்டிருக்கும் அற்புதக் காட்சியினை 45 அடி உயர லைற் கட் அவுட்டாக உருவமைத்திருக்கும் திறன் கண்டு அனைவரும் வியந்தனர். 

 
மேடை நிகழ்ச்சிகள் 
 
ஊரணித் தீர்த்தக் கடலில் மேடையமைத்து மேடையைச் சுற்றிய மின் அலங்காரங்கள் – அமைதியான கடற்பரப்பில் மாயாஜாலம் காட்ட மேடையில் இசை நிகழ்ச்சி நடந்தது. வேட்டைத்  திருவிழாவன்று  பிள்ளையார் தெற்கு வீதியை அலங்கரித்த வரிசையான குத்து விளங்கு மின் அலங்கார அமைப்பு மைதானத்திற்கு அழகு சேர்க்க, மைதான மூலையிலுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குச்சத்தில் வீதிக்கு மேலான பாலமமைத்தும், ரேவடி மைதானம் , உதயசூரியன் மைதானம், அம்பாள் தென்மேற்கு மூலை, ஆலடியில் M.G.R சதுக்கம், சிதம்பரா மைதானம், ஊரிக்காடு பழைய சோடாக் கடையடி ஆகிய இடங்களிலும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 
நிறைவாக 
(1) இன்னொரு “இந்திர விழா” க்காண   நாம் ஒரு வருடம் காத்திருப்போம் 
(2) 05-04-2019 ல் அம்பாள் கொடியேற்றம் 
(3) அம்பாள் 10ஆம் திருவிழாவன்று (14-04-2019) சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு (விகாரி) வருடப்பிறப்பு 
 
அனைவருக்கும் வல்வையூர் அப்பாண்ணாவின் அன்பான வணக்கங்கள்   
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
காண்டாவனம் (அக்னி நட்சத்திரம்) இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)
சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
நாகபட்டினம் காங்கேசந்துறை பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2024 (வெள்ளிக்கிழமை)
துள்ளுகுடியிருப்பு ரோமன் க. த. க பாடசாலைக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai