முன்னாள் ரேவடி விளையாட்டுக்கழக வீரர் சிவநாதன் நிமலன்(குட்டி) அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்தும் 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது.
முதலாவது போட்டியில் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் 1:0 என்ற கோல் கணக்கில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் ரேவடி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலினை பெற்றமையால் நடுவர்களினால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் ரேவடி வெற்றி பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.