மயிலிட்டி பிரதேசத்தில் 500 ஏக்கர் காணி எதிர்வரும் 16 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.
பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான இராணுவத்தின் வசமிருந்த யாழ். மயிலிட்டி பகுதியிலுள்ள 500 ஏக்கர் விடுவிக்கப்படும் அதே நேரம் பருத்தித்துறை மயிலிட்டி ஊடாக பொன்னாலை வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் முதல் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இவ்வீதியைப் பயன்படுத்தலாம். கடந்த காலம் பஸ் போக்குவரத்திற்காக மட்டும் இப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.