அனைத்து பாடசாலைகளுக்கும் 1ம் தவணை விடுமுறை காலம் நாளையிலிருந்து ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2018 (வியாழக்கிழமை)
பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலையில் 2ஆம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு, எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் 18ஆம் திகதி வரை முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதோடு, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.