சர்ச்சையின் மத்தியில் அம்மன் கோயில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2018 (புதன்கிழமை)
வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் இடம்பெறும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபை நிர்வாக கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கழமை இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் , செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களைத் தவிர வேறு எவரும் சமுகமளிக்கவில்லை.
இதேவேளை தற்போதைய நிர்வாகம் முத்துமாரியம்மன் நிலுவையில் இருந்த கல்யாண மண்டப நிதியினை செலுத்தி முடித்துள்ளார்கள் எனக்கூறப்படுகின்றது.
மேலும் முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தில் மண்டபம் அமைக்கும் பொழுது நிர்வாகத்தினால் அமைக்கபட்ட மண்டபம் என்பதை நீக்கி வல்வை மக்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கல்யாண மண்டபம் என தற்போதைய நிர்வாகத்தினால் அண்மையில் மாற்றப்பட்டது.
இதனை ஒரு சாரார் ஆட்சேபித்து நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டு, விடயம் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளது. அத்துடன் புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்படவேண்டும் என்று ஒரு சாரார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என அறிய வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.