யாழ். மலியிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசாங்கம் ஒரு பில்லியன் அமெ ரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.
நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ். காங்கேசந்துறை வீமன் காமம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஸ்வென்ஸ்கெட் இதனைத் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மீள்குடி யேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நோர்வே தொடர்ந்தும் அந்தத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அந்த வகையில் மயிலிட்டி துறைமுக த்தை நவீன முறையில் அபிவிருத்தி செய் யும் பொருட்டு நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்திட்ட த்திற்காக ஒதுக்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.(valampurii)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.