வல்வை விளையாட்டுக்கழகம் பாராட்டப்பட வேண்டியது - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2017 (வியாழக்கிழமை)
வல்வையில் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வல்வை விளையாட்டுக்கழகம் நடத்திய விளையாட்டுவிழாவே நல்லதோர் சாட்சியமாகும்.
நடத்திய அனைவரையும், பங்குபற்றிய அனைத்து கழகங்களையும் மனதார பாராட்டுகிறேன்.
போட்டியில் நேதாஜி வி.க வெற்றி பெற்றுள்ளது.. பாராட்டுக்கள்.
நேதாஜி வி.கவை இந்த இடத்திற்கு கொண்டுவர 50 வருடங்களின் முன்னரே பாடுபட ஆரம்பித்தேன்.. அணை கட்டுவதற்காக ஏராளம் பேரை பகைத்துக் கொண்டேன்.. பல ஆண்டுகள் நேதாஜி தலைவராக இருந்தேன்.. இன்று வல்வைக்கு பொதுவானவனாக இருந்தாலும் நேதாஜியின் இந்த வெற்றியை பாராட்டவேண்டியது எனது கடமை.. நோதாஜி வீரர்களோடு வல்வையின் அனைத்து கழக வீரர்களையும் பாராட்டுகிறேன்.
நெடியகாடு வி.க எனது தாய் வீடு..
நேதாஜி வளர்ந்த இடம்..
றெயின்போஸ் விளையாடிய மைதானம்..
தீருவில் என்னை கரபந்தாட்ட வீரனாக உருவாக்கிய கழகம்..
வல்வை புளுஸ் என்னை மேம்படுத்திய கழகம்.
ஆதிசக்தி என்னை கிராமோதய சபை தலைவராக வாக்களித்து தேர்வு செய்து, எனக்கு மேடையில் வைத்து நடிப்பிற்காக மாலை போட்ட கழகம்.
சைனிங்ஸ் என்னை வாழ்த்திய கழகம்..
ரேவடி மேடை தந்த கழகம்..
இன்று எனது முயற்சிகளுக்கு பெரும் துணை புரிவது மானாங்கானை இளங்கதிர் கழகம்.. எமது திரைப்படத்திற்கு இரண்டு பேருந்து நிறைய வந்து யாழ் மண்ணில் என்னையும் வல்வையையும் தலை நிமிர வைத்த கழகம்.
அன்றே எல்லா விளையாட்டுக்கழகங்களும் எனது நாடகத்திற்கு நடிகர்களை தந்து என்னை கலைஞனாக்கிய பெருமை கொண்டவை.
இதையெல்லாம் நினைத்து நினைத்து பெருமை கொள்கிறேன்.
சில தினங்களுக்கு முன் நான் வல்வை இளைஞர்கள் சிலரை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியபோது அவர்களிடம் இதை சொன்னேன்.
அன்று உங்களுக்கு இருந்த பல கழகங்களில் விளையாடும் வாய்ப்பு இன்று எங்களுக்கு இல்லை இன்னொரு கழகத்தில் விளையாட முடியாது தடுக்கப்பட்டுள்ளோம் எ���்று கவலை வெளியிட்டார்கள்.
அன்று அனைத்து கழகங்களிலும் விளையாடியதால் இன்று எல்லோரும் எனது நண்பர்கள், அந்த வாய்ப்பு இன்றைய வல்வை இளைஞனுக்கு இல்லை.
இதனால் உண்டாகும் இழப்பு பேரிழப்பாக அமைந்துவிடுமென்பதை உணர வேண்டும்.
உதாரணமாக பூப்பந்தாட்டம் விளையாட ஒரு கழகத்தில் ஆட்கள் இல்லை என்றால் ஆட்கள் உள்ள கழகத்தில் விளையாட என்ன தடை..?
அன்று நேதாஜியில் உதைபந்தாட்டத்திற்கு ஐந்து பேரே இருந்தனர்.. இதனால் ஓர் அணியை அமைக்க முடியவில்லை..
நானே தலைவராக இருந்து எல்லாக்கழகங்களுடனும் நேதாஜிக்கு உறவை வளர்த்தேன்.. ஆனால் இன்று அப்படி செய்வது கடினம் என்று நேதாஜி தலைவரே என்னிடம் கூறுகிறார் காரணம் கள நிலவரம் அப்படி..
இப்போதுள்ள பிளவுகள் பிளவுகளாகவே இருக்கட்டும் நாம் எல்லோரும் உறவு கொள்ளும் ஒரு புதிய தளத்தையும் உருவாக்க வேண்டும்.
அன்று பந்தடியால் வல்வை பிளவுபட்டபோது பந்தடியாதோர் சங்கம் தோன்றியது..
எனவேதான் கழகங்கள், கோயில்கள், பிரதேசங்கள் போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட திறமையாளர்களுக்கு மட்டும் இடம் கொடுத்து குடாநாட்டில் முதன்மை பெறும் முயற்சியில் இறங்க வேண்டும்.
நமது கழகங்களை மாறி மாறி வென்று வீரம் காட்டுவது பெருமையான செயல் அல்ல போதும்.
அகில இலங்கையை குறி வைத்து விளையாட்டுக்களை முன்னெடுக்க ஒரு தளம் அவசியம்.. அங்கு பேதங்கள் இருக்கக் கூடாது என்ற யாப்பு எழுதப்பட வேண்டும்.
அதற்கு சொலிடாரிட்டி என்ற சொல்லின் பொருள் சமுதாய வாழ்வில் சரியாக புரியப்பட வேண்டும்.
சொலிடாரிட்டி என்றால் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதாகும்.
இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் எமது திரைப்படத்திற்கு முழு வல்வையும் ஆதரவு தந்ததை மறக்கவா முடியும்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (Denmark)
Posted Date: April 07, 2017 at 19:57
திரு. நா. விக்னேஸ்வரன் அவர்களுடைய கருத்துக்கு நன்றி.. இதுபோல கருத்துக்கள் வளர்க்கப்பட வேண்டும்.. பல கருத்துக்கள் வரும்போதுதான் சரியான பக்கத்தை நாம் கண்டு பிடிக்கலாம்.. வாழ்த்துக்கள்..
நா.விக்னேஸ்வரன் . (ஜக்கியராட்சியம்)
Posted Date: April 07, 2017 at 05:13
திரு செல்லலத்துரை அவர்களின் கருத்தானது ஒரு தனிமனிதனின்
வெற்றிக்கும் புகழுக்கும் பொருந்தும்..அதுதவிர பொதுநலத்திற்கோ
ஒற்றுமைக்கோ பொருந்தாது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.