க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2017 (வெள்ளிக்கிழமை)
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டல் கையேடும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் கையேட்டை பயன்படுத்தி மாணவர்கள் தமக்கு விருப்பமான பாடவிதானங்களை தெரிவு செய்ய முடியும் என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா கூறினார்.
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு உதவும் வகையில், 300 விசேட ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.(news.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.