பிறேம்குமாருக்கு வல்வை முகம் என்ற பட்டம் வழங்கி கௌரவிற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2016 (சனிக்கிழமை)
லண்டன் 1979 நண்பர்களது ஒன்று கூடலின் போது சிறந்த சேவையினை பாராட்டியும் திறமையினை பாராட்டியும், திரு கே.பி.பிறேம்குமாருக்கு வல்வை 1979 நண்பர்கள் குழுவினர் "வல்வை முகம்" என்றதொரு பட்டத்தை வழங்கி கெளரவித்து உள்ளனர். திரு.கே.பி அண்ணா அவர்கள் லண்டனில நடைபெறும் வல்வையர்களின் அனைத்து பொது நிகழ்வுகளையும், நிழல் படம் பிடித்து அணைத்து உலக வல்வையர்களின் கண்களுக்கு விருந்தாக தருவதில் சிறந்ததொரு புகைப்பட கலைஞர்.
இதை கடந்த சில காலமாக ஒரு சேவையாக கால நேரம் பார்க்காது மிகவும் நேர்த்தியாக சிரத்தையுடன் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: December 26, 2016 at 01:52
வல்வை முகம்
கொடுக்கப்பட வேண்டியவருக்கு கொடுக்கப்பட்ட அருமையான பட்டம்.
.
வல்வை முகம்
தனக்கு பொருத்தமான வல்வைமகனை போய்ததேடிப்பிடித்து அவரது முகத்தில் ஒட்டிக்கொண்டு தனக்கு பெருமை சேர்த்துக்கொண்டது.
.
வல்வைமகன்
வல்வை முகம் பிறேம்குமார் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
k.s.thurai (Denmark)
Posted Date: December 25, 2016 at 01:59
இது போல பெருமையுடன் வாழ்க.. பாராட்டிய நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.. வல்வை முகம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் முகத்தை தேர்ந்துள்ளார்கள்.. அதன் படி வாழ்வது மிகவும் கடுமை.. காரணம் முகம் ஒன்றுதான் அதில் பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகிய ஐம்புலன்களும் பிளவின்றி அடங்கியுள்ளன.. அதனால்தான் அதற்குப் பெயர் முகம்.. மற்றய உறுப்புக்கள் அப்படியல்ல.. முகம் என்பது பிளவுபட்டு நிற்காது என்பது பொருள்.. நண்பர்கள் நன்கு உணர்ந்து பட்டத்தை வழங்கியுள்ளார்கள்.. வல்வை பிளவுபட்ட ஊர் அல்ல என்ற பெருமை காக்கும் வல்வை முகம் வாழ்க..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.