பருத்தித்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வருட முற்பகுதியில் பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக நேரடியாக வந்த கடற்றொழில் அமைச்சர் இங்குள்ள நிலமை குறித்து ஆராய்ந்து சென்றார்.
தற்பொழுது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அப்பகுதி ஆழம், மண்ணின் தன்மை என்பன பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இவை பரிசோதிக்கப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அதன் பின்னரே துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.