வல்வையில் 21வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் முத்துக்குமாரு மற்றும் அம்பிகை அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது 21 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியாக அமையகின்றது.
இவ் உதைப்பந்தாட்ட போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.A.S இராஜேந்திர (பேராசிரியர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. M. வேதாபரணம் (தலைவர்- வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக்) அவர்களும், திரு A.அருளானந்தசோதி (செயலாளர் - பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்) அவர்களும், திரு.V.கார்த்திகேசன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு பிரதான அனுசரணையாளர் திரு.மு.தங்கவேல்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.