வல்வையர் வரலாற்றில் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் இவ்வாண்டு 2016 - செ.தெய்வச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2016 (வியாழக்கிழமை)
உலக வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்த மகோற்சம் ஓர் உலக சாதனையாக மௌனகால நிகழ்வெய்தியுள்ளது. வல்வையில் வாழ்ந்தவர்கள் கண்டம் விட்டு கண்டம் கடந்து பக்தி சிரத்தையுடன் கலந்து கொண்டார்கள். கோடியாக் கரையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ முத்துமாரி சகோதரிகள் மூன்று கண்டங்களை வந்து சேர்ந்து விட்டார்கள். நாலாவது கண்டமாக அவுஸ்திரேலியாவில் ஸ்ரீ முத்துமாரி கோயில் கொள்ளும் ஓர் புத்தொளி தென்படுகின்றது. அக் கோயில் வல்வெட்டித்துறை கோயிலின் அச்சு பிரதியாக அதே அளவு நீள அகலங்களுடன் அதே அளவு தெய்வங்களை பிரதிஸ்டை செய்யப்பட வேண்டும்.
உலக வரலாற்றில் எத்தனையோ தெய்வக்கோயில்கள் தொடங்கி பூம்புகார் நகரம் கூடி கடல் கொண்டதாக வரலாறு உள்ளது. வல்வையர் வரலாறு தொலைக்கப்படாமல் இருக்க இன்னெரு இரரஜ இராஜ சோழன் தோன்றும் வரை எம் வல்வையர் வரலாறு பிரதிகள் எடுக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
கடந்து வருடம் ஊர் மண்ணில் அம்பாளின் வசந்த மண்டப பூஜை நேரலை செய்யும் பாக்கியம் பெற்றேன். இவ் வருடம் இங்கிலாந்து லண்டன் மாநகரில் 9வது வருட மகோற்சவத்தை பத்து திங்கள் தரிசனம் செய்து புகைப்படம் வீடியோக்களை உங்களுடன் பகிர்தேன். கனடா வல்வை முத்துமாரியையும் தேர் தீர்த்தம் தரிசிக்கும் பூர்வீக பாக்கியம் பெற்றேன்.
எம் உலக வல்வையர்கள் 15 நாட்க்கள் முத்துமாரியின் பக்தி வலையில் ஆட்பட்டு புனிதர்களாக இருக்கும் இவ் வேளை சில விடையங்களை பகிர்ந்து கொள்ள மனதில் ஆசைகளை வைத்துக்கொண்டு வல்வையர்களால் எடுக்கப்பட் 12000 புகைப்படங்களை முகநூல் வலைத்தலத்தில மீள் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் மேலும் இன்னும் 1500 படங்கள் மீள் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கும்வேளையில் எனது கணனி பல தடவைகள் பதிவேற்றம் செய்யால் தடைப்படுகின்றது.
வல்வையர்களுடன் வல்வை வாசத்துடன் உரிமை கொண்டவர் என்ற தகுதியுன் சில விடையங்களை பகிர்ந்து கொள்கின்றேன். எனது முகநூலில் பல ஆயிரம் புகைப்படங்கள் மீள் பதிவேற்றம் செய்யப்பட்டது உங்களுக்காக அல்ல. ஒரு சிறிய காரணம் எல்லோரும் எல்ல இணையத்திற்கும் செல்வதில்லை. பெரிய காரணம் இவ் ஆண்டு வல்வையரின் மிகப்பெரிய ஆவணப்பதிவு. மற்றது வல்வையில் வாசம் உள்ள கணனி வல்லுனர்கள் இவ்வாண்டின் புகைப்படம் வீடியோக்களை பாதுகாப்பான முறைகளில் சேமித்து நேரடியாக புகைப்படங்களாகவோ பாதுகாக்கலாம். என் ஊர் மண் இன்னும் 1000 வருடங்களுக்கு தன் வரலாற்றை சேமிக்கும் ஓர்மம் படைத்தவர்கள வாழுவார்கள்;. இலங்கையின் கரையோரம் எத்தனையோ ஊர்கள் இருக்க கோடி மாரி ஏன் வல்வை வந்தாள் என்பதை வரலாறு பதிவு செய்து கொண்ருக்கின்றது.
கனடா முத்துமாரி தரிசிக்கும் போது தேர் இரவு பூதவாகனம் இல்லாத சிறிய குறையாக தெரிந்தது. அக் கோயிலின் பிரதம நிர்வாகி நீங்கள் செய்து தாருங்கள் என்று கேட்டார் உடனடியாக மறுத்துவிட்டேன். தாயாரையும் வல்வை வாசமுள்ளவர்களையும் படம் வீடியோ எடுக்கும் பணிதான் என்னுடையது. வல்வையில் நான் செவிவழியாக கேட்ட செய்தி ஒன்று அம்பாள் மற்றும் எந்த தெய்வம் என்றாலும் தேரில் பக்த்தர்களுக்கு தனியாக அருள்பாலித்து விட்டு உங்கள் வரவை மட்டும் பதிவு செய்து அதன் பலனை வழங்கிவிட்டு இரவு பூதவாகனத்தில் எழுந்தருளித்தான் அன்று இரவு தன்னை வந்தடைந்வர்களுக்கு வரங்களை அள்ளி வழங்குவார்கள். இதனால் பூதவாகனம் கனடா முத்துமாரிக்கு மனநிறைவுள்ள பல நூற்றுக்கணக்கான வல்வை மக்களால் பகிர்ந்து பூதவாகணம் செய்யப்பட வேண்டும். வாகனம் செய்தோர் திருவிழாக்கு வருகை தந்து தெற்பை போட்டு அவ்வளவு பேரும் தேங்காய் உடைத்து அம்பாளை தரிசிக்கும் பாக்கியம் பெறுவர்ர்கள். அதுவும் வல்வையர் வரலாறாக பதியப்படும். கனடா வல்வையர்கள் அடுத்த பௌர்ணமிக்குள் பூதவாகனம் பற்றி முடிவு எக்ககாவிட்டால் அம்பாள் தனக்கு தேவையானதை தேவையானவர்களிடம் பெற்றுக்கொள்வாள். அம்பாளுக்கு அது போல் காரம்பசு வாகனமும் விசேசமானது.
லண்டன் மாநகரில் நான் முதற்காலடி எடுத்து வைத்த 1991 ம் ஆண்டில் இருந்து சித்திரை பௌர்ணமியில் இன்று வரை லண்டன் வினாயகர் கோவிலில் இன்று வல்வை மக்கள் பொது உபயமாக அபிசேக ஆரரதனைகள் கற்பூரத்திருவிழாவும் நடைபெறுகின்றது. அதன் பின்னர்தான் திருவாளர் சீவரெத்தினம் அவர்களால் டூட்டிங் முத்துமாரி கோயில் உண்டாக்கப்பட்டு 20வருடங்களில் மறைந்து விட்டது. அதன் பின்னர்தான் கலாநிதி நந்தலால்நேரு (மணிவண்ணன்)அவர்கள் கோயில்கள் பல இடங்களில் பிடுங்கி பிடுங்கி பிரதிஸ்டை செய்ப்பட்டது. நிரந்தரமான குருக்ள் இல்லாத குறைபாடு இன்று வரை காணப்படுகின்றது. அது வல்வையரின் பொதுக்கோயிலாக இல்லாதபடியால் பல வல்வையர்களின் அக்கறையின்மை தொடர்ந்து நிலவுகின்றது. இக் குறைபாடு தொடர்ந்து நீடிக்கப்படுவது லண்டன் வல்வையர் சமுதாயத்துக்கு நல்லதல்ல. பெரும் தனவந்தர்களான வல்வையர்கள் லண்டன் வல்வை முத்துமாரிக்கு நிரந்தரக் குருக்கள் முக்கால பூசைகள் நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்து கொடுக்கலாம் கொடுக்கப்படவேண்டும். அங்குள்ள பல தெய்வங்களுக்கு நீண்ட காலமாக அபிசேகங்கள் செய்யப்படாதது நிவர்த்தி செய்ப்படவேண்டும். கனடாவில் திருவாளர் ராஜ்குமாரால் கனடா முத்துமாரி வல்வை மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாதிரி லண்டன் வல்வை முத்துமாரியும் வல்வைமக்களிடம் ஒப்படைக்கலாம் மிகவிரைவில் அதற்கு முதல் லண்டன் வல்வையர்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அவுஸ்திரேலியாவில் அம்பாள் கோயில் கொள்வதற்கு முதல் லண்;டன் வல்வையர்கள் தம்கௌரங்களை காப்பற்றிக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை வரையப்படுகின்றது.
நாம் எவ்வளவு சொத்து சுகம் காணி வீடு கடை நிலங்ள் எல்லாக் கண்டத்திலிருந்தாலும இருந்தாலும்; வல்வையில் சொந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு ஓடிப்போனவர்கள் என்ற ஒரு முத்திரை குத்தப்பட்டவர்கள்தான். வல்வை முத்தமாரியை கோயில் கொள்ளன வைத்து வல்வையர் வரலாற்றை வரைந்து வல்வை வாசம் உள்ளவர்கள் ஆவோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.