வடமராட்சியில் தேசிய தொழிற் தகமை (NVQ) கணினி கற்கை நெறி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2016 (புதன்கிழமை)
வடமராட்சி வலய கல்வி அலுவலக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கற்கை நிலையத்தால் Computer Application Assistant NVQ Level 3 கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. புலோலி மெ.மி.த.க பாடசாலை அருகிலுள்ள வலய கணினி வள நிலையத்தில் வாரநாட்களில் பிற்பகல் 02.00 மணிக்கு முன்னராக விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
வரும் திங்கட்கிழமை தொடக்கம் கற்கை நெறி ஆரம்பமாகவுள்ளதால் உடனடியாக விண்ணப்பங்களை சமர்ப்பியுங்கள்.
ஆறு மாதங்கள் கொண்ட இக் கற்கை நெறி வாரநாட்களில் முற்பகல் 08.00 மணி தொடக்கம் பிற்பகல் 02.00 மணிவரை நடைபெறும்.
விண்ணப்பதாரிகள் க.பொ.த (சா.த ) பரீட்சையில் ஆங்கில பாடத்தில் S தர சித்தியேனும் பெற்றிருப்பதுடன் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். க.பொ.த (உ.த ) கற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வடமராட்சியில் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையால் கணினி துறையில் Natinal Vocational Qualification கற்கை நெறிகளை நடாத்துவதற்கு அனுமதி பெற்ற ஒரே ஒரு நிறுவனம் இதுவாகும்.
தற்போது பல அரசபணி வெற்றிடங்களுக்கு NVQ சான்றிதழே கோரப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.