கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடப்பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2016 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடப்பணிகள் கடந்த தைப்பூச நன்நாளில் (24.01.2016) ஆரம்பமாகி, முதற்கட்ட வேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேற்படி கட்டடத்திற்கான கட்டட அனுமதியும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கட்டட வேலைகளையும், அதனுடன் கூடிய பாலர் பூங்கா வடிவமைப்பு வேலைகளையும் முன்னெடுப்பதற்காக பழையமாணவர்கள், நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள், பெற்றோர்கள் அனைவரிடமிருந்தும் பெரும் நிதிப்பங்களிப்பினை தயவாக வேண்டிநிற்கின்றோம்.
வங்கிக் கணக்கு இலக்கம் : 70601947 ( கணபதிபடிப்பகம், இலங்கைவங்கி, வல்வெட்டித்துறை Kanapathy Padippakam, Bank Of Ceylon, Valvettiturai, BankCode:7010, IFSC Code:- BCEYLKLX)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.