நேற்றைய சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2015 (வியாழக்கிழமை)
நேற்று வல்வை நெடியக்காட்டு குளத்தில் குளிக்கும் போது ஏற்பட்ட ஒருவர் மரணமடைந்தும், இருவர் காயமும் அடைந்திருந்தனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது.
நேற்று காலை மூவர் குறித்த குளத்திற்கு குளிக்க வந்துள்ளனர். இவர்களில் ஒருவர் அவ்விடத்தை விட்டு விலகிய பின்னர், சம்பவத்தில் பலியான இளைஞர் குளத்தில் இறங்கி பின்னர் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த இவரின் நண்பர் அவரைக் காப்பாற்று வதற்காக குளத்தில் சத்தம் இட்டு குதித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது.
சத்தத்தைக் கேட்ட நபர் ஒருவர் வந்து, இரண்டாவதாக குதித்தவரை காப்பாற்றி கொண்டுவரும்போதே இன்னொருவர் குளத்திற்குள் அமிழ்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இப்பகுதியைச் சேர்ந்த வேறும் சில இளைஞர்கள் வந்து குளத்திற்குள் தேடி முதலாவது இளைஞரை ஆபத்தான நிலையைல் மீட்டுள்ளனர்.
இதன் பின்னர் இவர்கள் இருவரும் இப்பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும்போது, வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி அருகில் இருந்த கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் மூவரும் வல்வெட்டித்துறை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். வைத்தியசாலையில் முதலாவது இளைஞரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.
தற்பொழுது அடுத்த இளைஞர் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையிலும், முச்சக்கர வண்டி சாரதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வல்வெட்டித்துறை போலீசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.