20 வருடங்களாக பணியாற்றிவரும் மொன்றியல் வல்வை மக்கள் சங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2015 (வெள்ளிக்கிழமை)
கடந்த 24 ஆம் திகதி கனடா மொன்றியல் திருமுருகன் கோயில் பூங்காவனத் திருவிழாவை மொன்றியல் வல்வை மக்கள் சங்கம் ஏற்பாடுசெய்திருந்தது. பூங்காவனத் திருவிழாவிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இசைக் கச்சேரியிலும் பங்கேற்க எதிர்பார்த்ததற்கும் மேலானனோர் - சுமார் 2 ஆயிரத்திற்கு அதிகமானோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் பூங்காவனத் திருவிழாவன்று சுமார் 40 அடி உயர போட்டிக்கோ ஒன்று வைக்கப்பட்டிருந்தமை பலரையும் கவரந்திருந்தது. இப்ப்போட்டிக்கோவையும் உருவாக்கியிருந்தவர்கள் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாலா மாஸ்டரின் மகன் திரு.ஜோதி தலைமையிலான வல்வையைச் சேர்ந்த 'மொன்றியல் வல்வை மக்கள் சங்க' இளைஞர்கள் ஆவார்கள்.
நிகழ்வில் பங்கெடுத்திருந்த அனைவருக்கும் நிகழ்வு முடிந்த பின்னர் உரிய நேரத்தில் சைவ உணவு பரிமாறப்பட்டமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
மொன்றியல் வல்வை மக்கள் சங்கம் இந்த நிகழ்வை கடந்த 20 வருடங்களாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
நிகழ்விற்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.