வல்வை வைரவிழா உதைபந்து -ஞானமுருகன் மற்றும் பொம்மேர்ஸ் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2022 (வெள்ளிக்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகம் 60 ஆவது ஆண்டு நிறைவினை( வைரவிழா) முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் (07/04/2022) இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து உரும்பிராய் அண்ணா விளையாட்டுக்கழகமானது மோதியது. போட்டியில் 5 : 0 என்ற கோல்கணக்கில் ஞானமுருகன் அணியானது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.ஞானமுருகன் அணிசார்பாக றெனோட் மற்றும் லஸ்ரின் தலா 2 கோல்களினையும் ரசிந்தன் 1 கோலினையும் பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக ஞானமுருகன் அணியின் முன்கள வீரர் லஸ்ரின் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது ஆட்டத்தில் வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டுக்கழகத்தினை நாவற்குழி அன்னை விளையாட்டுக்கழகம் மோதவிருந்தது. இப்போட்டிக்கு நாவற்குழி அன்னை விளையாட்டுக்கழகமானது வருகை தராத காரணத்தினால் வதிரி பொம்மேர்ஸ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.