வல்வெட்டித்துறை என்ற வாசமண்ணில் உண்மை நேர்மை கடமை என்று தனது வாழ்வியலாக கொண்ட மனிதர்களை இழந்து வருகின்றோம். வல்வெட்டித்துறை மக்களின் ஒரு கெட்ட பழக்கம் ஒருவன் நல்ல தொழில் செய்தால் இதைப் போல் தானும் செய்வது. ஆனால் பழனியப்பாவின் தொழிலை செய் யாரும் முன்வந்ததில்லை.
அது அன்னை தெரசா போன்ற தெய்வப்பிறவிகளுக்கு ஆண்டவன் வழங்கிய அருட்கொடை.
வல்வெட்டித்துறை மண்ணில் சுனாமி பொங்கி வழிந்த போது ஆழ்வார்ப்பிள்ளை மகன் பழனியப்பாவுக்குதான் கடல் மேல் பாற்கடல் பள்ளி கொண்ட பரந்தாமன் காட்சி கொடுத்தார்.
இன்று மகளிர் பாடசாலை விளையாட்டு;மைதானம் இந்திரா விழா கொண்டாடும் திடல் பெரிய புகைக்குண்டு விடும் பெரிய திடல் தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட பழனியப்பா திடல்.
அக்காலத்தில் பிள்ளைகள் புதைக்கும் சுடலைககு முன்னால் சுடலை பூக்கள் பூத்து ஒரு குட்டி காணியாகத்தான் இருந்தது. அப்போது விட்டுக்குப்பைகளை மாட்டு வண்டிகளில் சேகரிப்பார்கள்.பட்டினசபையின் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அந்த குட்டி காணியின் ஓரத்தில் சரித்துவிடுவது வழமை. புழனியப்பாவின் தீர்க்கதரிசன சிந்தனையின் பயனாக அவர்கள் தினசரி வேலையின் ஓய்வு நேரங்களில் காலை மாலைகளில் அந்த குப்யைகளை சமப்படுத்திக் கொண்டே இருப்பார். வல்வெட்டித்துறை மண்ணில் பெரிய சாண்டோக்கள் சாதனையாளர்கள் விளையாட்டு வீரர்களை கண்ட சமுதாயம். மீண்டும் நிலமாக தோன்றிய வல்வை மண்ணையும் வீர மனிதரையும் 1950 க்கு முன்பின் பிறந்த சமூகம் வல்வெட்டித்துறையின் வீர வரலாறாக உயர் சமூக கொடையாக எம் வரலாற்றில் பதிவுசெய்து கொண்டது.
அத்திடல் பழனியப்பாவின் தீர்க்க தரிசனம் இல்லாவிட்டால் இன்று ஒரு துவிச்சக்ரவண்டி விடக்கூடி இடமில்லாத நிலமாக மாறியிருக்கும். பழனியப்பா திடலுக்கு கிழக்கு மேற்காக உள்ள காணிகள் இன்று சாட்சியாக இருக்கின்றது.
பழனியப்பா இவர்கள் ஒரு குட்டி பெட்டியில் தனது ஆப்பிரேசன் தியேட்டரையே கொண்டு திரிந்த சேவையாளர். ஒரு முறை எனது பெறாமகனார் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது சிறிய தங்கூசி வாயில் கொழுவி விட்டது. உடனே ஆத்துபறந்து ஊறனிக்கு செல்லும் போது பழனியப்பா வழமை போல் குப்யை சமப்படுத்திக்கொணடடிருந்தார்கள். வுpடயத்தை சொன்னோம். ஏம் ஊரில் நிறைந்திருக்கும் தொற்று நீக்கி கடலில் கைகளை கழுவிட்டு வந்தார்கள். எப்போதும் வைத்திருக்கும் சிறிய பெட்டியை திறந்து சிறிய கொறடை எடுத்து தங்கூசியின் அடி சப்பை பகுதியை வெட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் பின்புறமாக வெளி வந்துவிட்டது. பெறாமகனின் வேதனை எங்களின் தவிப்பெல்லாம் கணப்பொழுதில் அடங்கிவிட்டது.
1950 க்கு முன்பின் குட்டியான நாங்கள் 5சதம் விசில் எங்கள் விளையாட்டுத் திரவியம்.
5சதம் விசிலில் குச்சம் கடற்கரையில் உதைபந்தாட்டம் நடாத்தி 3 அங்குல உயரத்தில் பரிசு கிண்ணம் வழங்கி இளமைகள் ஊஞ்சலாடிய கதையை இன்னெரு சந்தர்ப்பத்தில் தொடர்கின்றேன். அந்த நாளில்தான் அந்த 5சதம் விசிலுக்கும் இரண்டுபக்கம் புளியங்கொi;யைவிட சிறியதாக மூடிகள் இருக்கும். என் சின்ன வயதிலும் அந்த சின்ன விசிலின் ஒரு பக்க மூடி என் வாய் மேல் அன்னத்தில் காற்றமுக்கம் வெளியேறி ஒட்டிவிட்டது.
அப்பொழுதும் கொறட்டால் தான் பிடித்து இழுத்து எடுத்துவிட்டார்கள். இவைகள விட குட்டிச்சம்பவஙகள் பயங்ரமான துன்பங்கள் நிறைந்த வியாதிகளுக்கு செய்யப்பட்ட சேவைகளை ஊர்ச்சமூகம் ஏற்கனவே அறிந்ததுதான். காயங்கள் பட்டவுடன் ஓடுவோம் பழனியப்பா வீட்டுககு கட்டுவதற்கு துண்டும் துட்டும் கொண்டு போனதில்லை அப்பாவின் பிள்ளைகளாக தன் பேரப்பிள்ளைகளாத்தான் கடமையாக காதலாக வாழ்ந்து போனார்கள்.
வல்வெட்டித்துறையார் நாம் யாரோ கட்டிய ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சை யாரோ கட்டிய கோயில்களை கும்பிட்டுக்கொண்டு வாழ்ந்த சுவடு தெரியால் மறைந்து போனவர்கள். மனிதநேயபணிக்கு வள்ளல் தகமைகள் தேவையில்லை மனமிருந்தால் போதும் என்று மௌனமாக உரக்க சொன்னதுதான் பழநியப்பா காவியம்.
புழநியப்பாவின் பேரப்பிள்ளகள் வையித்திய பட்டங்களை பெற்றுவிட்டாhகள். இவர்களின் புனித தெய்வீகபணி எம் மண்ணுக்கு தேவை காத்திருக்கின்றோம்.
வல்வெட்டித்துறையின் வரலாற்றில் மாமனிதராக புனிதராக வாழ்தவர்கள் வரிசையில் நிலை நிறுத்திக் கொள்கின்றது பழநியப்பாவை.
எதை நீங்கள் விரும்புகின்றீர்களோ எதைக்குறித்து பிரார்த்திக்கிறீர்களோ அதை நீங்கள் அடைவதில்லை. நல்லது எவற்றை இவ்வளவுநாள் சம்பாதித்தீர்களோ எந்த குணத்தின் மொத்த உருவமாக உங்களை வளர்தீர்களோ அதன் பலனைத்தான் அடைகின்றீர்கள்.
புலம்பெயர்ந்த வல்வெட்டித்துறை மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தந்து வணங்குகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.