கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இந்த வீசாக்களின் கால எல்லையை மே மாதம் 12 ஆம்திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டுத்திணைக்களம் அறிவித்துள்ளது.
வீசா காலத்தை நீடிக்க எதிர்பார்த்திருப்போர் ஜூன் 11ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் eservices.immigration.gov.lk/vs என்ற இணையத்தளத்தில் அதற்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். .
உரிய வகையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் திணைக்கள வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: