இலங்கை சட்டக்கல்லூரி இங்கு மட்டும் தான் Attorney at Law இனை கற்க முடியும், Attorney at law இருந்தால் மட்டும் தான் ஒரு சட்டத்தரணியாக நீதிமன்றில் வாதிடலாம் மற்றும் கையொப்பம் இடலாம்.
இக் கற்கை நெறியில் 24 பாடங்கள் உள்ளன அதனை 3 semester இல் முடிக்கலாம் , முறையே 1st semester 8 பாடங்கள், 2 nd semester 7 பாடங்கள், 3 rd semester 9 பாடங்கள். பாடங்கள் யாவும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படும், பரீட்சையை விரும்பிய மொழியில் எழுதலாம் ஆனால் கூடுதலான பாடப்புத்தகங்கள் ஆங்கிலத்திலே உள்ளன. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பரீட்சை நடைபெறும் அப்பரீட்சையில் தகுந்த பெறுபேற்றை பெறாவிட்டால் மீண்டும் அடுத்துவரும் சித்திரை மாதம் மீள பரீட்சை எழுதலாம் இவ்வாறாக 4 தடவைகள் மாத்திரமே பரீட்சை எழுதலாம் இதை தாண்டினால் சட்டக்கல்லூரியில் இருந்து விலக்கப்படுவர்.( முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கிருணிகா பிரேமசந்திர 2 nd semester 4 தடவைகள் பரீட்சை எழுதி தகுந்த பெறுபேற்றை பெறமுடியாததால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்)
ஒரு பாடத்தில் pass marks 40 ஆனால் மொத்த பாடத்தின் average 50 ஆக இருக்க வேண்டும் அதாவது 1 St semester இல் 8 பாடங்கள் உள்ளன.
8 பாடங்கள்* 50 புள்ளிகள் மொத்த புள்ளிகள் 400 மேற்பட்டதாக இருக்க வேண்டும் இதில் 8 பாடங்களும் 40 புள்ளிகளுக்கு மேல் எடுத்து average 50 ற்கு குறைவாக இருந்தால் fail ஆக கருதப்படும்.
இதில் 7 பாடங்கள் pass ஆகி 1 பாடம் fail ஆகினால் மீளவும் 8 பாடங்களை எழுத வேண்டும்.
சட்டக்கல்லூரியில் கற்பவர்களை 3 வகையாக பிரிக்கலாம்
1) நேரடியாக பரீட்சை எழுதி வருபவர்கள் _ இவர்கள் 3 வருடம் கல்வி கற்க வேண்டும், ஒரு வருடத்தில் 1 semester இல் உள்ள பாடங்களை மாத்திரம் எழுத முடியும், வகுப்பிற்கு 80 வீத வரவு கட்டாயம் இருத்தல் வேண்டும்
2) இலங்கையில் உள்ள சட்ட பல்கலைகழகத்தால் அல்லது திறந்த பல்கலைக்கழகத்தால் LLB degree யை முடித்தவர்கள் சட்டக்கல்லூரியில் உள்ள இறுதியாக உள்ள 9 பாடங்களை சித்தி அடைந்தால் போதும்
3) சட்டக்கல்லூரியால் அங்கிகரிக்கப்பட்ட இலங்கைக்கு வெளியே உள்ள பல்கலைகழகத்தில் LLB degree யை முடித்தவர்கள் மொத்தமாக உள்ள 24 பாடங்களையும் எழுத வேண்டும் ஆனால் ஒரு வருடத்தில் இரண்டு தடவைகள் நடக்கும் பரீட்சையில் வெவ்வேறு semester பாடங்களில் பரீட்சை எழுதலாம். (S. சஞ்சீவ்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.