கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2020 (புதன்கிழமை)
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளில்
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்
யாழ் மாவட்டத்திலும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தின் மத்தியிலும் ஊரடங்குச்சட்டம் அமூல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு தடையின்றி வழங்கவும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எமது மக்களை பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் நகராட்சி மன்றத்தின் சகல சுகாதார பணியாளர்களும், வேலை வெளிக்கள பணியாளர்களும் சாரதிகளும் இன்று பணியிலிடுபட்டிருந்தனர்.
கழிவகற்றல் மற்றும் நீர் வழங்கல் சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் விசேடமாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான தொற்றுநீக்கி மருந்து விசிறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. நகராட்சி மன்ற பொதுச்சுகாதார பரிசோதகரின் தலைமையில் வல்வெட்டித்துறை சந்தி பேரூந்து நிலையம், நவீன சந்தை கடைத்தொகுதி, மரக்கறிச்சந்தை கட்டடத்தொகுதி, வல்வெட்டித்துறை மீன்சந்தை, ஊறணி மீன்சந்தை, ஆதிகோவிலடி மீன்சந்தை, தொண்டைமனாறு சந்தி பேரூந்து நிலையம் மற்றும் செல்வச்சந்நிதி ஆலய சூழல் ஆகிய பொதுமக்கள் கூடும் பிரதான இடங்களில் தொற்றுநீக்கி மருந்து விசிறப்பட்டது. இந்நடவடிக்கைகளில் எமது நகராட்சி மன்றத்துடன் வல்வெட்டித்துறை பொலீசாரும் இணைந்து செயற்பட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் தொற்றுநீக்கி மருந்து விசிறும் நடவடிக்கைகளுக்காக தனது மருந்து விசிறும் பம்பியை கொண்டுவந்து எவ்வித பிரதி பலனையும் எதிர்பாராது தானே முன்னின்று மருந்து விசிறிய கொம்மாந்தறையைச்சேர்ந்த திரு.வதனன் அவர்களுக்கும் அவரை எமது பணிக்காக ஒழுங்கு படுத்திதந்த அதே இடத்தைச்சேர்ந்த வசி அண்ணா அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இப்பணியில் ஈடுபட்ட பொதுச்சுகாதார பரிசோதகர், நகராட்சி மன்ற பணியாளர்கள், பொலீசார் அனைவருக்கும் நகராட்சி மன்றின் சார்பிலும் இப்பிரதேச மக்கள் சார்பிலும் நன்றிகளையும் பாராட்டுதல்களையு ம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பொது மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் உங்களுக்காக நாம் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் கண்ணுக்குத்தெரியாத அபயத்தை எதிர்கொண்டு பணியாற்றி வருகின்றோம். நீங்கள் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
•ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதும் எல்லோரும் வெளியே வருவதை தவிர்த்திடுங்கள்
•அவசியமானவர்கள் மட்டும் வந்து தேவையானவற்றை பெற்றுக்கொண்டு உடனே வீடுகளுக்கு திரும்பிவிடுங்கள்
•கடைகள், சந்தைகளில் கூட்டமாக சேருவதை தவிர்த்திடுங்கள்
•ஒருவருக்கொருவர் ஆகக்குறைந்தது 3 அடி இடைவெளியையாவது பேணுங்கள்
•கழிவு களை பாதுகாப்பாக சேகரித்து வைத்து சுகாதார பணியாளர்கள் வரும்போது கையளியுங்கள்.
•பயன்படுத்திய முககவசம், கையூறை போன்றவற்றை தனியாக இறுக்கமான பைகளில் கட்டி தனியாக கொடுங்கள் முடியுமானால் அயலில் வசிப்பவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நன்றாக எரித்துவிடுங்கள்
எம்மையூம் எமது உறவூகளையூம் நாம் ஒன்றிணைந்து பாதுகாப்போம்!
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.