Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வட மாகாண மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்

பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2020 (திங்கட்கிழமை)
உலகளாவிய தொற்றுநோயாக COVID 19 (கொரோனா) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 15.03.2020 வரை 18 நோயாளிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
 
எனினும் இதுவரை வடமாகாணத்தில் கொரோனாத் தொற்றுள்ள ஒரு நோயாளரும் அடையாளங் காணப்படவில்லை. ஆனாலும் இந் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான மாகாண சுகாதார சேவையினரின் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வருமாறு:
 
தனிமைப்படுத்தல் (Quarantine) நடவடிக்கைகள்
 
இறுதியாக 15.03.2020 இல் அறிவிக்கப்பட்ட பட்டியலின்படி பின்வரும் 14 நாடுகளிலிருந்து வருபவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 
1. ஈரான்
2. இத்தாலி
3. தென் கொரியா
4. ஆஸ்திரியா
5. டென்மார்க்
6. ஃபிரான்ஸ்
7. ஜேர்மனி
8. நெதர்லாந்து
9. சுவீடன்
10. ஸ்பெயின்
11. சுவிற்சர்லாந்து
12. ஐக்கிய ராஜ்ஜியம் (UK)
13. பெல்ஜியம்
14. நோர்வே
 
மேற்படி நாடுகளிலிருந்து 09.03.2020க்கு பின்னர் நாட்டினுள் நுழைந்தவர்கள் அனைவரும் (அந்த நாட்டவர்கள், எமது புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் இங்கிருந்து அந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்கள்) தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 
ஏனைய நாடுகளிலிருந்து வருபவர்கள் தமது வதிவிடங்களில் இரண்டு கிழமைகளுக்கு தம்மைத் தாமே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறனவர்கள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் வீட்டிலுள்ள அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். புலம் பெயர்ந்துள்ள உங்களது உறவினர்கள் அண்மைக்காலத்தில் இங்கு வருகை தரத் திட்டமிட்டிருப்பின் அவர்களை தற்போதைக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தவும். அதே போல் இங்குள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் இயலுமான வரை உங்களது பயணத்தை பிற்போடவும். உங்களது வீட்டில் அல்லது அயலில் யாராவது வெளிநாட்டிலிருந்து வந்திருந்தால் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர் (PHI), குடும்ப நல உத்தியோகத்தர் (PHM) அல்லது கிராம சேவகருக்கு அறிவிக்கவும்.
 
கூட்டம் கூடுதலைத் தவிர்த்தல்
 
கொரோனாத் தொற்றின் காரணமாக இலங்கையில் ஏற்கனவே கூட்டம் கூடுதல் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
பலர் கூடக் கூடிய நிகழ்வுகள் எதையும் தவிர்த்துக் கொள்வது அல்லது பிற்போடுவது அவசியமானது. மீறி நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதிலிருந்து விலகியிருக்குமாறு பொது மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் உதாரணமாக அணி விளையாட்டுக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை, கலாசார நிகழ்வுகள், வழிபாட்டு இடங்கள். அத்தியாவசியமற்ற கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் அனைத்தையும் பிற்போடவேண்டும்.
 
திரையரங்குகள், கலை நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட வேண்டியவையே.
 
இவற்றை மீறி இவ் வகை கூட்டம் கூடும் நிகழ்வுகள் இடம் பெற்றால் பொதுமக்கள் உடனே பொதுச் சுகாதார பரிசோதகருக்கு (PHI) அல்லது கிராம சேவகருக்கு அறிவிக்கவும்.
 
குடும்ப நிகழ்வுகளான திருமண நிகழ்வுகள் போன்றவற்றை பிற்போடுவது நல்லது அல்லது குறைந்தளவு ஆட்களுடன் இவற்றை நடாத்துங்கள்.
 
சகல வணக்கத் தலங்களிலும் பத்தர்கள் கூடுவதை தவிர்த்துக் கொள்வதுடன் திருவிழாக்கள் வழிபாடுகளை எளிமையாக நடாத்த பொறுப்பானவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
 
வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைப் (ஏனைய நோய்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைக்கூட) பார்வையிடச் செல்வதை கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதாயின் ஒருவர் மட்டும் குறுகிய நேரத்தில் சென்று வரவேண்டும். உள்ளக நோயாளிகள் உள்ள சகல அரச வைதை;தியசாலைகளிலும் தரமான உணவு விநியோகம் நடைபெறுவது கவனத்திற்குரியது.
 
தனிநபர் சுகாதாரம்
 
சகலரும் தமது தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தமது வீட்டிற்கு வெளியில் செல்கின்றவர்கள் அடிக்கடி (குறைந்தது 2 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை) தமது கைகளை முறைப்படி கழுவ வேண்டும்.
 
வீட்டிற்கு திரும்பும் போது வீட்டிற்குள் செல்ல முன்னர் வாசலிலேயே கைகளை முறைப்படி கழுவுவதுடன் முகத்தையும் கழுவ வேண்டும். கைகளை முறைப்படி கழுவுவதற்கு சாதாரண சவர்க்காரமும் நீரும் போதுமானது. வேலைத்தளங்களிலும் பொது இடங்களிலும் கைகளை முறைப்படி கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். யாருக்காவது கொரோனாத் தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், களைப்பு, வரட்டு இருமல் போன்றவை (சிலருக்கு உடல் நோ, மூக்கடைப்பு, தொண்டை நோ போன்றவையும் ஏற்படலாம்) ஏற்பட்டால் உடனடியாக முகத்துக்கு கவசம் அணிவதுடன் அரசாங்க வைத்தியசாலைகளை அணுகவும். இவ்வகை நோயாளிகள் ஏனைய பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். குறிப்பாக வேலைத் தளங்களுக்கு செல்ல வேண்டாம்.
 
சுகாதாரத்துறை ஊழியர்கள்
 
16.03.2020 அரசாங்க, வர்த்தக வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைகள் மேலும் அறிவிக்கப்படலாம். ஆனால் சுகாதாரத்துறையினருக்கு இவ் விசேட விடுமுறை நாட்கள் கடமை நாட்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் சகல பதவிகளிலும் சுகாதர அமைச்சு, சுகாதாரத் திணைக்களங்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், வைத்தியசாலைகளில் கடமையாற்றும் அலுவலர்கள் உடனடியாக கடமைக்கு திரும்ப வேண்டும்.
 
பல்துறைசார் கலந்துரையாடல்
 
நாளை (17.03.2020) காலை 10 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரால் அழைக்கப்பட்டுள்ள சகல திணைக்களத் தலைவர்களுக்குமான (அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்கள்) கலந்துரையாடல் கட்டாயமாக நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
 
வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வட மாகாணம்.
16.03.2020

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
கடலுக்குள் நடத்தப்பட்ட கையிறிழுத்தல் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2024 (வெள்ளிக்கிழமை)
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
தெய்வேந்திரா ஐயர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
பேராசிரியர் சிவத்தம்பியின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - மேர்ஷி நிரோசினி சுரேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
தங்கனின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
புவியியலாளருக்கு உதவும் உராங்குட்டான்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதியாவின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (வல்வெட்டித்துறை)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சின்ன கடற்கரையோரம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதிசிவம் நினைவாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிலம்பாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2023>>>
SunMonTueWedThuFriSat
      1
2
3
4
5
6
78
9
10111213
14
15
16
17
18
19
20
21
22
23
242526272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai