யாழ் விளையாட்டுத் துறையினால் நடாத்தப்படட 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான திறந்த கராத்தே போட்டி பருத்தித்துறை தும்பளை தற்காப்பு கலையக அரங்கில் கடந்த 09.03.2020 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி யாழ் விளையாட்டுத்துறை அதிகாரி தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச சபை சார்பாக பங்குபற்றிய பெண்கள் அணியினர் முதலாம் இடத்தையும், நல்லூர் பிரதேச சபை பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். வல்வெட்டித்துறையை சேர்ந்த திருமதி முரளி மாலதி அவர்கள் பருத்தித்துறை பிரதேச சபை சார்பாக பங்குபற்றிய பெண்கள் அணியினருள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் அணி சார்பாக யாழ் பிரதேச சபை அணியினர் முதலாம் இடத்தையும், பருத்தித்துறை ஆண்கள் அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.