பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் பெருவிளையாட்டுக்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் இன்றைய தினம்(15/02/2020) காலையில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் தொண்டமானாறு கலையரசி அணியினை எதிர்த்து வல்வை அணியானது மோதியது. முதற் செற்றை 25:14 என கலையரசி கைப்பற்ற இரண்டாம் செற்றினை 25:22 என்ற கணக்கில் வல்வை அணியானது கைப்பற்றியது.
வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான மூன்றாம் செற்றில் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் 22:25என்ற செற்கணக்கில் வல்வை அணியானது தோல்வியினை தழுவி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
அரையிறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு வல்வை அணியானது தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.