வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60ஆம் ஆண்டு நிறைவினையிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடர் நேற்று வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களை புட்டணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, நீண்ட காலமாக வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு தலைமை தங்கி நடாத்திய அமரர் மு. தங்கவேல் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவது போட்டியில் நெடியகாடு விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இரண்டாவது போட்டியில் ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 2 போட்டிகள் வீதம் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.