பருத்தித்துறை நகரத்தின் மரபுரிமை சின்னங்களில் ஒன்றாக விளங்கிவரும் தெருமுடி மடம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தைத்திருநாளாகிய கடந்த 15 ஆம் திகதி காலை நடைபெற்ற இந்நிகழ்வில், கனரக வாகனத்தினால் சேதமாக்கப்பட்டிருந்த பருத்தித்துறை தெருமுடி மடம் புனரமைக்கப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்ட நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் வருணி ஜெயதிலக, பருத்திநகர் அபிவிருத்திச் சங்கம் சுவிஸ் நிறுவன தலைவர் க.வள்ளிநாயகன், யாழ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் வரலாற்றுத்துறைத் தலைவராகவும் சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும் கடமையாற்றி வரும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், பேராசிரியர் கிருஸ்துராஜா மற்றும் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராஜ் உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள், பருத்தி நகர் அபிவிருத்திச் சங்க செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் பங்குபற்றியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.